அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்பில், பிரசாரம் உள்ளிட்ட பணிகளுக்கு பொலித்தீன் பயன்படுத்துவது மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகார சபையுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
பொலித்தீன் பாவனை தொடர்பில் அதி விசேட வர்த்தமானிகளான 2034/33 முதல் 2034/38 வரையிலான வர்த்தமானிகள் ஊடாக தெளிவான அறிவுறுத்தல்கள் உள்ளன. அதன் அடிப்படையில் இந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது பொலித் தீன் பயன்பாடு தொடர்பில் அந்த வர்த்தமானி அறிவுறுத்தல் மற்றும் தேசிய சுற்றாடல் சட்டம் ஆகியவற்றுக்கு அமைவாக நாம் நடந்துகொள்வோம். தேசிய சுற்றாடல் சட்டத்தின் பிரகாரம் பொலித்தீன் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கே உள்ளது.
இந் நிலையில் நாம் மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம். அவர்களுடன் இணைந்து செயற்பட மத்திய சுற்றாடல் அதிகார சபையில் பொலிஸ் காவலரண் ஒன்று அமைக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் உள்ள சுற்றுச் சூழல் தொடர்பிலான பிரிவுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
மத்திய சுற்றாடல் அதிகார சபையுடன் இணைந்து நாம் இது தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுப்போம். என பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM