கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதற்கு அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி தீர்மானித்திருந்த போதிலும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்திருக்கின்றார்.
அமைச்சர் மனோ கணேசனின் பிறந்த தினம் நேற்றுமுன்தினமாகும். அன்று காலை மனோ கணேசனுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன் தனக்கு பிறந்த நாள் பரிசு வழங்குமாறு அமைச்சரிடம் கோரியுள்ளார். உள்ளூராட்சி தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கான சம்மதத்தை பிறந்த நாள் பரிசாக தனக்குத் தருமாறு பிரதமர் கோரியுள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்தக் கோரிக்கையை அடுத்து நேற்றுமுன் தினம் இரவு அமைச்சர் மனோ கணேசன் பிரதமரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நேற்று இரவும் மீண்டும் இவ்விடயம் குறித்து கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து தமிழ் முற்போக்குக் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது. இதன்போது தொகுதிப் பங்கீடு விடயத்தில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கோரிக்கைக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகள் உரிய இணக்கப்பாட்டைத் தெரிவித்திருக்கவில்லை. இதனால் இந்தப் பேச்சில் இழுபறி நிலை ஏற்பட்டிருந்தது.
இதனையடுத்து கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலில் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஜனநாயக மக்கள் முன்னணியின் சின்னமான ஏணிச் சின்னத்தில் தனித்து களமிறங்குவதற்கு முடிவு செய்திருந்தது. தனித்துப் போட்டியிடுவதற்கான ஆயத்தங்களை முன்னணியின் தலைவரும் அமைச்சருமான மனோகணேசன் மேற்கொண்டிருந்தார்.
இந்த நிலையில்தான் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சர் மனோ கணேசனுடன் தொடர்புகொண்டு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட வருமாறு மீண்டும் அழைப்பு விடுத்திருக்கிறார். தனக்குப் பிறந்த நாள் பரிசு வழங்குமாறும் அவர் கோரியிருக்கின்றார்.
இதனையடுத்து ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுக்கள் தொடர்ந்து வருகின்றன. தொகுதிப் பங்கீட்டில் இணக்கம் காணப்பட்டால் தமிழ் முற்போக்குக் கூட்டணி கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடும். இல்லையேல் தனித்து ஏணிச் சின்னத்தில் களமிறங்கும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM