மண்சரிவில் சிக்கி 5 பேர் பலி : 15 பேர் மாயம்

17 Dec, 2017 | 02:12 PM
image

சிலி நாட்டில் நிலச்சரிவில் சிக்கி 5 பேர் இறந்துள்ளனர். மேலும், மண்சரிவால் மாயமான 15 பேரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

சிலி நாட்டில் தற்போது கனமழை பெய்து வருகிறது. கனமழையால் அங்குள்ள வீடுகள், மற்றும் பல்வேறு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. பலத்த மழையால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 11.4 செ.மீ மழை பெய்துள்ளதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சிலியின் முக்கிய சுற்றுலா ஸ்தலமான வில்லா சாண்டா லூசியாவில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் சேற்றில் சிக்கி 4 பெண்கள் மற்றும் சுற்றுலா பயணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மண்சரிவால் மாயமான 15 பேரை மீட்கும் நடவடிக்கையை மீட்புப்படை அதிகாரிகள் எடுத்து வருகின்றனர். நிலச்சரிவில் சிக்கியவர்களை துரிதமாக மீட்கவேண்டும் என அந்நாட்டு அரசு,  அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த துயர சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17