கள்ளக் காதலனோடு இருந்ததைப் பார்த்ததால், மகள் என்றும் பாராமல் பெற்ற தாயே பிளேடால் கழுத்தை அறுத்துக் கொன்ற சம்பவம் பொதுமக்களிடையே அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லி அருகில் உள்ளது காஜியாப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முன்னிதேவி (30). இவரது மகள் காஜல் (6). கடந்த சில தினங்களுக்கு முன், தனது மகள் காஜலை காணவில்லை என்று பொலிஸ் நிலையத்தில் முன்னிதேவி முறையிட்டார்.
இது குறித்து பொலிஸார் விசாரித்துத் தேடியபோது சிறுமி காஜல், கழுத்தறுபட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டாள். இதுதொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டபோது தனது மகளுக்கு யாரோ செய்வினை வைத்து கொலை செய்ததாகவும் முன்னுக்குப் பின் முரணாக முன்னிதேவி பதிலளித்தார். இதனால் பொலிஸாருக்கு முன்னிதேவி மீது சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து அவரை கண்காணித்த பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்திய போது இறுதியில், முன்னிதேவியே தனது மகளைக் கொன்று நாடகமாடியதை ஒப்புக் கொண்டார். பொலிஸாரிடம் முன்னிதேவி அளித்த வாக்குமூலம் விவரம் வருமாறு:
சம்பவம் நடந்த தினத்தன்று எனது கணவர் அலுவலகத்துக்கு சென்றிருந்தார். அவர் சென்றதும் எனது காதலனோடு வீட்டின் மொட்டை மாடியில் தனியாக பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த காஜல் நான் தனியாக வேறு ஒருவருடன் பேசியதை பார்த்து விட்டார். இந்த விவகாரம் கணவருக்கு தெரிந்து விடக்கூடாது என்பதற்காக பெற்ற மகள் என்றும் பாராமல் எனது காதலருடன் சேர்ந்து காஜலை பிளேடால் கழுத்தை அறுத்துக் கொன்றேன் என்று அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, பொலிஸார் முன்னிதேவி மற்றும் அவரது காதலரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM