வவுனியா புதிய பேரூந்து நிலையத்திலிருந்து நத்தார் தினத்தன்று அனைத்து பேரூந்து சேவைகளும் இடம்பெறும் என வவுனியா மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தலைவர் எஸ்.ரி. இராஜேஸ்வரன் தெரிவித்தார்.
வவுனியா புதிய பேரூந்து நிலையம் கடந்த 2017 ஜனவரி 16 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டதன் பின்னர் சேவைகள் எவையும் அங்கிருந்து இடம்பெறாத நிலையில் பயன்பாடின்றி காணப்பட்டு வருகின்றது.
இந் நிலையில் வட மாகாண முதலமைச்சரும் போக்குவரத்து அமைச்சருமான சி.வி. விக்னேஸ்வரனுடன் வட மாகாணசபை கட்டிடத்தொகுதியில் புதிய பேரூந்து நிலையம் தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியா பேரூந்து நிலையமானது பயன்பாடின்றி காணப்படுவது தொடர்பாக நாம் பல தடவைகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் சுட்டிக்காட்டியிருந்தோம்.
எனினும் அங்கிருந்து சேவைகளை மேற்கொள்ளவதற்கு இலங்கை போக்குவரத்து சபை முன்வராத நிலையில் எம்மாலும் சேவையினை அங்கிருந்து செயற்படுத்த முடியாதிருந்தது.
இந் நிலையில் வட மகாண முதலமைச்சரும் போக்குவரத்து அமைச்சருமான சி.வி. விக்னேஸ்வரன் அவர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தோம்.
இதன்போது தேசிய போக்குவரத்து அணைக்குழுவின் தலைவர், வட மகாண போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் மற்றும் செயலாளர், வட மகாண தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கங்களின் ஒன்றியத்தினர், ஐந்து மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்க பிரதிநிதிகள், இலங்கை போக்குவரத்து சபையினுடைய 7 சாலை முகாமையாளர்கள் இப் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்தோம்.
இதன்போது இறுதி முடிவாக அவைரும் இணைந்து எதிர்வரும் 25 ஆம் திகதி நத்தார் தினத்தன்று புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து சேவைகளை ஆரம்பிப்பது என முடிவு எட்டப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM