இந்தியா - பெங்களூரில் ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்த பெண்ணை ஆறு ஆண்கள் கடத்தி மிகவும் கொடூரமாக தாக்கி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட நில நடுக்கம் ஒன்றில் வீட்டின் கட்டிடம் இடிந்து விழுந்ததால் குறித்த பெண்ணின் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் உயிரிழந்துள்ளனர்.
இதனால் அந்த பெண் தனியாக ஹோட்டல் ஒன்றில் 50 ரூபாய் சம்பளத்தில் பாத்திரம் கழுவும் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்த பெண் தனியாக இருப்பதை அறிந்த சிலர் ஒரு வாரத்திற்கு முன்னர் அந்த பெண் வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டு இருக்கும் போது அடித்து காட்டுப்பகுதிக்கு இழுத்துச் சென்றுள்ளனர்.
பெண்ணின் கால்களை கல்லால் அடித்து உடைத்தும், கைகளை திருகியும் உடைத்துள்ளனர். அதன் பின்னர் இரவு முழுவதும் ஆறு நபர்கள் மிகவும் கொடூரமாக மிருகத்தனத்துடன் பாலியல் பலாத்காரம் செய்தனர். உயிருக்கு போராடிய அந்த பெண் இரவு முழுவதும் அங்கேயே உடலில் துணியில்லாமல் கிடந்துள்ளார்.
இதனையடுத்து குப்பையில் தூக்கி வீசப்பட்டிருந்து துணியை உடலின் சில பகுதிகளை மறைத்துக்கொண்டு தரையில் ஊர்ந்து அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் வந்து படுத்து உயிருக்கு போராடியுள்ளார்.
36 மணி நேரமாக அங்கேயே சாப்பாடு இன்றி உயிருக்கு போராடியுள்ளார். அந்த பெண்ணுக்கு யாரும் உதவ முன்வராத நிலையில் சமூக ஆர்வலர் ஒருவர் பெண்ணை மீட்டு தனியார் வைத்திய சாலை ஒன்றில் சேர்த்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM