தனது முறையற்ற உறவைப் பார்த்துவிட்ட ஆறு வயதுச் சிறுமியின் தாய், தனது காதலனுடன் சேர்ந்து தன் சொந்த மகளின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் டெல்லியில் இடம்பெற்றுள்ளது.
டெல்லியின் காஸிப்பூரைச் சேர்ந்தவர் இந்த 30 வயதுப் பெண். நேற்று முன்தினம் புதனன்று வேலை முடிந்து வீடு திரும்பிய அவரது கணவர் மது அருந்த வெளியே சென்றார்.
அவர் வரத் தாமதமாகும் எனத் தெரிந்ததால், குறித்த பெண் தன் காதலனை வீட்டுக்கு வருமாறு அழைத்தார். அவர் வருவதற்குள் தனது ஆறு வயது மகளை கடைக்குச் சென்று சில பொருட்களை வாங்கிவர அனுப்பினார்.
வீடு திரும்பிய சிறுமி தனது தாயும் காதலரும் நெருக்கமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றார். தந்தையிடம் சொல்லப் போவதாகக் கூறிய சிறுமியை தாயும் அவரது காதலனும் சேர்ந்து கழுத்தை நெரித்து மயக்க நிலைக்குக் கொண்டுசென்ற பின், சிறுமியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்தனர்.
கொலைத் தடயங்களை காதலன் அகற்ற, தன் இளைய மகனை அழைத்துக்கொண்டு சிறுமியைத் தேடுவது போல் நடித்த அந்தத் தாய், கடைசியில் பொலிஸில் புகாரளித்தார்.
எனினும், சிறுமியின் உடல் வீட்டின் வெளியே சிறிது நேரம் கிடந்ததைக் கண்ட அயலவர்கள் பொலிஸாரிடம் அது பற்றித் தெரிவித்தனர்.
பொலிஸாரின் கடுமையான விசாரணையில் நடந்த உண்மைகளை அந்தப் பெண் கூறினார். இதையடுத்து, அந்தப் பெண்ணும் அவரது காதலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM