ரஷ்யாவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள 2018 ஆம் ஆண்டு கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தை கைப்பற்ற ஆர்ஜன்டீனாவுக்கு வாய்ப்பு உள்ளதாக நட்சத்திர வீரர் மெஸ்ஸி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கால்பந்து விளையாட்டில் இந்த தலைமுறையில் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக ஆர்ஜன்டினாவின் லயோனல் மெஸ்ஸி விளங்கி வருகிறார். பார்சிலோனா அணிக்காக விளையாடும் அவர், பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார். ஆனால், ஆர்ஜன்டீனா அணிக்காக மிகப்பெரிய சம்பியன் பட்டத்தை அவர் வாங்கி கொடுத்தது கிடையாது.
கடந்த 2005ஆ-ம் ஆண்டு தனது 18 ஆவது வயதில் தேசிய அணியில் காலெடுத்து வைத்த மெஸ்ஸி, 2006, 2010, 2014 ஆம் ஆண்டுகளில் மூன்று உலகக் கிண்ணத் தொடர்களில் விளையாடியுள்ளார்.
இவரது தலைமையிலான ஆர்ஜன்டீனா கடந்த 2014-ஆம் ஆண்டு பிரேசில் நாட்டில் நடைபெற்ற உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தது.
இதனால் மெஸ்ஸி சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். பின்னர் அவரது ரசிகர்கள் கேட்டுக்கொண்டதால் ஓய்வு முடிவை திரும்பப்பெற்றார்.
இந்நிலையில் ரஷ்ய உலகக் கிண்ணக் தொடர் குறித்து மெஸ்ஸி கூறுகையில், ரஷ்ய உலகக் கிண்ணத்தில் மற்ற அணிகள் எந்த மனநிலையில் வருகிறார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால், நாங்கள் உலகக் கிண்ணத்தை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் செல்கிறோம். எப்பொழுதும் இந்த எண்ணத்துடன்தான் செல்வோம்.
கால்பந்து எனக்கு உலகக் கிண்ணத்தை கொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM