இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அவுஸ்திரேலியாவிடம் தோற்றதற்கு இன்றைய போட்டியில் பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கிடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் அவுஸ்திரேலியா 2–-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்டில் 10 விக்கெட்டுக்கள் வித்தியாசத்திலும், அடிலெய்ட்டில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் 120 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றிருந்தது.
இந்நிலையில் இவ்விரு அணிகளும் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் தோற்ற இங்கிலாந்து அணி இன்றைய போட்டியிலாவது பதிலடி கொடுக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தொடரை இழக்காமல் இருக்க இங்கிலாந்து வெற்றி பெறுவது அவசியமாகிறது.
முன்னாள் தலைவர் குக்குக்கு இந்த போட்டி 150-ஆவது டெஸ்டாகும். இந்த மைல்கல்லை தொடும் முதல் இங்கிலாந்து வீரர் இவர்தான்.
மறுமுனையில் ஆஸி. இந்த டெஸ்டில் வென்று ஹெட்ரிக் சாதனையுடன் தொடரை கைப்பற்றும் ஆர்வத்துடன் உள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM