உள்ளூராட்சி மன்ற தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிடவுள்ள ஐக்கிய தேசிய முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசார கூட்டமாக அனைத்து பங்காளி கட்சிகளும் ஒன்றிணைந்து ஜனவரி 6 ஆம் திகதி விசேட மாநாடொன்றை கொழும்பில் நடத்த ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் நேற்று தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பிட்ட கோட்டேயில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் உள்ளூராட்சி வேட்பாளர்களை அறிவுறுத்துவது தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது. தற்போது 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு விட்டன. இதன்படி அடுத்த வாரம் ஏனைய உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
மேலும் இந்த தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிடவே திட்டமிடப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் யானை சின்னத்தில் போட்டி யிடவுள்ள ஐக்கிய தேசிய முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசார கூட்டமாக அனை த்து பங்காளி கட்சிகளும் ஒன்றிணைந்து ஜனவரி 6 ஆம் திகதி விசேட மாநாடொன்றை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM