வந்தடைந்தார் செயிட் அல் ஹூசைன் 

Published By: MD.Lucias

06 Feb, 2016 | 08:56 AM
image

ஐக்­கிய நாடு­களின் மனித உரிமைகள் ஆணை­யாளர் நாயகம் செயிட் அல் ஹூசைன் உத்­தி­யோ­கப்­பூர்வ விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு இன்று காலை 8.25 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

டுபாயிலிருந்து வந்த ஈகே650 என்ற விமானத்தில் வந்த செய்ட் அல் ஹூசைனுடன் 6 பிரதிநிதிகளும் வருகை தந்தனர்.

 நான்கு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள செயிட் அல் ஹூசைன் எதிர்­வரும் 9 ஆம்­தி­கதி வரை நாட்டில் தங்­கி­யி­ருப்­ப­துடன் அரச தரப்பு, எதிர்த்­த­ரப்பு, சிவில் சமூ­கப்­பி­ர­தி­நி­திகள் உள்­ளிட்­டோரை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்­ள­துடன் வட­மா­கா­ணத்­திற்கும் விஜயம் செய்­ய­வுள்ளார்.

அத்­துடன் இன்று சனிக்­கி­ழமை யாழ்ப்­பா­ணத்­திற்­கான விஜ­யத்தை மேற்­கொள்­ள­வுள்ள ஐ.நா. மனித உரி­மை­யாளர் செயிட் அல் ஹூசைன் அங்கு வட­மா­காண முத­ல­மைச்­சரை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்­ள­துடன், யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட தரப்­பி­ன­ரையும் சந்­தித்து கலந்­து­ரை­யா­ட­வுள்ளார்.

இலங்கை அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ள­தாக கூறப்­படும் உள்­ளக விசா­ரணைப் பொறி­முறை செயற்­பாட்டில் வட­மா­கா­ணத்தின் பங்­க­ளிப்பு முக்­கி­யத்­து­வ­மிக்­க­தாக இருக்­கு­மென கரு­தப்­ப­டு­கின்ற நிலை­யி­லேயே செயிட் அல் ஹூசைன் வட­மா­காண முதல்­வ­ருடன் பேச்­சு­வார்த்தை நடத்­த­வி­ருக்­கின்றார்.

விசே­ட­மாக விசா­ரணை பொறி­மு­றையின் போது பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி வழங்கும் செயற்­பாடு எவ்­வாறு அமையும் என்­பது குறித்து இதன் போது கலந்­து­ரை­யா­டப்­ப­டு­மென எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

இதே­வேளை இன்று மாலை கொழும்பு திரும்­ப­வுள்ள செயிட் அல் ஹூசைன் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர ஆகி­யோரை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெரிய நீலாவணை இரட்டை படுகொலை :...

2024-03-28 21:36:38
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07