இந்திய அணி 2 ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணிக்கு 393 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்துள்ளது.
இரு அணிகளுக்குமிடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டி மொகாலியில் இடம்பெற்று வருகின்றது.
இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் இந்திய அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 392 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இந்திய அணி சார்பாக ரோஹித் சர்மா ஆட்டமிழக்காது 208 ஓட்டங்களயும் தவான் 68 ஓட்டங்களையும் ஐயர் 88 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக திஸர பெரேரா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணி முதல் போட்டியில் வெற்றிபெற்று 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில் இப் போட்டியில் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றவேண்டுமாக இருந்தால் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 393 ஓட்டங்களைப் பெறவேணடும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM