கொழும்பு - 15 அளுத்மாவத்தை வீதியில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதால் பெரும் வாகன நெரிசல் நிலவுவதாக எமதுசெய்தியாளர் தெரிவித்தார்.
கொழும்பு - 15 ஹெட்டியாவத்தை சந்தியில் இருந்து இக்பாவத்தை சந்தி வரையிலான வீதி நீண்டகாலமாக திருத்தப்படாது குண்டும்குழியுமாக காணப்பட்ட நிலையில் அவ் வீதியூடாக பயணிப்போர் பெரும் சிரமங்களை எதிர்கொண்ட நிலையில், மக்கள் ஆர்ப்பாட்டத்தை இன்று முன்னெடுத்துள்ளனர்.
குறித்த வீதியில் நீர்க்குழாய் திருத்தப்பணிகள் நீண்டகாலமாக இடம்பெற்றுவந்த நிலையில் அவ்வீதியூடாக போக்குவரத்து செய்வதில் பிரயாணிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர்கள் என பாரிய சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.
வெயில் காலத்தில் தூசியாலும் மழைகாலங்களில் சேறும்சகதியாலும் அவ்வீதியூடாக பயணிப்போர் சிரமங்களை எதிர்கொண்டு வந்த நிலையில் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இது தொடர்பில் கொழும்பு மாநாகர சபையும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சகையும் வீதி அதிகார சபையும் கவனத்தில் எடுத்து குறித்த வீதியை சீக்கிரத்தில் சீர் செய்தர வேண்டுமென ஆர்ப்பாட்டத்திலீடுபட்டுள்ள மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM