உள்ளுராட்சி மன்றங்களுக்கான எல்லை பிரிப்பு விடயத்தில் நுவரெலியா மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியாக இருந்த லவர்சிலிப் சின்னகாடு தோட்டத்தை பிரதேச சபை எல்லைப்பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் இங்கு மாநகர சபைக்கு சேர்ந்து இருக்கப்பட வேண்டிய தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாநகர சபையுடன் மீண்டும் லவர்சிலிப் தோட்டத்தை உள்வாங்க வேண்டும் என கோரி அத்தோட்ட மக்கள் இன்று வீதிக்கு இறங்கி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
நுவரெலியா பொரலந்த நகரத்தில் அத்தோட்ட மக்கள் பதாதைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பியவாறு இந்த ஆர்ப்பாட்டத்தை சுமார் ஒரு மணித்தியாலயங்கள் மேற்கொண்டனர்.
பெரிதாக இவ் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க எத்தணித்த போதிலும், 50ற்கும் மேற்பட்ட மக்களே இவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
நுவரெலியா மாநகர சபையில் நேரடியாக சலுகைகளை பெற்று வந்த சுமார் 1000 வாக்களர்கள் நுவரெலியா பிரதேச சபைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், தாங்களை மாத்திரம் மாற்றுவதன் மூலம் தங்களது அடிப்படை விடயங்களை பெற்றுக் கொள்வதில் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவதாக இவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM