( ஆ.பிரபுராவ் )
இலங்கைக்கு கடத்த விருந்த ரூபா 75 இலட்சம் மதிப்பிலான கேரள கஞ்சாவை பறிமுதல் செய்துள்ள இந்திய பொலிஸார் ஒருவரை கைது செய்து முக்கிய கடத்தல்காரை தேடிவருகின்றனர்.
மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு படகொன்றில் கேரள கஞ்சா கடத்த இருப்பதாக பொலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து இராமேஸ்வரம் பாம்பன் மண்டபம் உள்ளிட்ட கடலோரப்குதிகளில் மாவட்ட சிறப்பு பிரிவு காவல்துறை மற்றும் கியூபிரிவு பொலிஸார் தீவிர சோதகையில் ஈடுபட்டுவந்தனர். அப்போது மண்டபம் அருகே பிரப்பன்வலசை கடற்கரைப்பகுதியை நோக்கி வேகமாக வந்த காரை நிறுத்த பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால் கார் நிற்காமல் சென்றதையடுத்து பொலிஸார் விரட்டி சென்று காரை மடக்கி பிடித்து மண்டபம் காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ 75 இலட்சம் மதிப்பிலான 85 பார்சலில் இருந்து 165 கிலோ கேரள கஞ்சாவை பறிமுதல் செய்த பொஸார் தொண்டி பகுதியைச் சேர்ந்த அலி என்பவரை கைது செய்து காரில் இருந்து தப்பிச் சென்றவர் யார் எனவும் முக்கிய கடத்தல்காரர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM