பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வரவு, செலவுத்திட்டம் வெற்றி பெற்றது போல ஐக்கிய தேசிய கட்சி உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் நாட்டின் மூன்றில் இரண்டு சபைகளையும் கைப்பற்றுவது நிச்சயம். அதற்கு முக்கிய காரணமாக மீண்டும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிட உள்ளதையும் குறிப்பிடலாம் என்று கல்வி இராஜாங்க அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து அம்பகமுவ பகுதிக்கான பொருட்கள் கையளிக்கும் நிகழ்வு நேற்று கொட்டகலை ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. அந் நிகழ் வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே
அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான ஆர்.ராஜாராம், மலையக தொழிலாளர் முன்னணியின் நிதிச் செயலாளர் விஸ்வநாதன் புஸ்பா உட்பட பயனாளிகளும் கலந்து கொண்டனர்.
இராஜாங்க அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்,
புதிய தேர்தல் முறைப்படி இந்த தேர்தலை எமது நாட்டு மக்கள் சந்திக்கின்றார்கள். எங்களுடைய பெருந்தோட்ட மக்கள் இந்த தேர்தலை எங்களுக்கு சாதகமாக மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும். இந்த தேர்தலில் ஜனாதிபதியையோ அல்லது பிரதமரையோ மாற்றி யமைக்க முடியாது. இன்னும் மூன்று வருடங்களுக்கு இந்த நல்லாட்சி அரசாங்கமே தொடரும். எனவே அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றவர்களுக்கு தங்களுடைய வாக்குகளை வழங்குவதன் மூலமாக அரசாங்கத்தின் முழுமையான பயனையும் நாங்களும் பெற்றுக்கொள்ள முடியும்.
எதிர்க்கட்சியில் இருக்கின்றவர்களுக்கோ அல்லது வேறு சுயேச்சை குழுக்களுக்கோ வாக்களிப்பது எந்தவிதமான ஒரு பயனையும் தராது. எனவே நாங்கள் புத்திசாலித்தனமாக சிந்தித்து செயற்பட வேண்டும். தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு மீண்டும் ஆதரவை வழங்குவதன் மூலம் நாம் முழுமையான பயனை பெற்றுக்கொள்ள முடியும்.
எதிர்காலத்திட்டங்களில் நாங்கள் முழுமையாக உள்வாங்கப்பட வேண்டுமானால் எங்களுடைய உறுப்பினர்கள் தலைவர் களாக, உப தலைவர்களாக வர வேண்டும். இதன் மூலம் எமது அபிவிருத்தியை வேக மாக முன்னெடுக்க முடியும். அரசாங்க ஆத ரவு இல்லாமல் நாம் எதனையும் செய்ய முடியாது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM