தேங்காய்க்கான கட்டுப்பாட்டு விலை 75 ரூபாவாக நிர்ணயிக்கப்படவுள்ளதாகவும் அது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் இவ்வாரம் வெளியிடப்படவுள்ளதாகவும் வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
வரட்சி காரணமாகவே தேங்காயின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும் கிராமப்புறங்களில் தேங்காய்க்கு பாரியளவில் நெருக்கடியில்லை. எனினும் நகரப்புறங்களிலேயே அது அதிக விலைக்கு விற்கப்படுகிறது.
தென்னந்தோப்புகளுடன் தொடர்புடைய அமைச்சுகள் மூன்று உள்ளன. அவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்தி தேங்காயை கொள்வனவு செய்து சதொச ஊடாக 65 ரூபாவுக்கு விற்பனை செய்கிறோம். எனினும் அதற்கு நிலவும் கேள்வி போதுமானதாக இல்லை.
எனவே ஜனாதிபதி தலைமையில் நாளை மாலை (இன்று) வாழ்க்கைச் செலவுகளை ஆராயும் குழு கூடவுள்ளது. அதன்போது தேங்காயை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்கவுள்ளோம்.
மேலும் தேங்காய்க்கு கட்டுப்பாட்டு விலையும் நிர்ணயிக்கவுள்ளோம். அதன்படி கட்டுப்பாட்டு விலை 75 ரூபாவாக அமையவுள்ளது. அதனை வர்த்தமானி மூலம் அறிவிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM