"இருப்பவர்கள் இருந்தால் இப்படி நடந்திருக்குமா?" : விழிப்புணர்வுப் பேரணி

Published By: Digital Desk 7

09 Dec, 2017 | 01:08 PM
image

வவுனியா - ஓமந்தை அலகல்லு போட்டகுளத்தில் 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய சம்பவத்துடன் தொடர்புபட்ட ஆசிரியருக்கு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், சமூகத்தில் இனி இவ்வாறு இடம்பெறக்கூடாது என்றும் தெரிவித்து நொச்சிக்குளம் மகளிர் கிராம அபிவிருத்திச்சங்கத்தினால் இன்று காலை 9.30 மணியளவில் விழிப்புணர்வுப் பேரணி ஒன்று இடம்பெற்றது.

ஓமந்தை ஆரம்ப மருத்துவப் பராமரிப்பு பிரிவிற்கு முன்பாக ஒன்றிணைந்த மகளிர் அமைப்பினர் பிரதான ஏ9 வீதியூடாக ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு பேரணியாகச் சென்று ஓமந்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் மகஜர் ஒன்றினைக் கையளித்துள்ளனர்.

இப்பேரணியில் கலந்துகொண்டவர்கள் "இருப்பவர்கள் இருந்தால் இப்படி நடந்திருக்குமா?", "சிறுமியை பலாத்காரம் புரிந்தவருக்கு தண்டனை வழங்கு", "இதற்கு உடந்தையாக இருந்த தாயார் மீது நடவடிக்கை மேற்கொள்" போன்ற பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு பேரணியில் கலந்துகொண்டனர்.

குறித்த ஆசிரியர் முன்னர் கற்பித்த 10ற்கும் மேற்பட்ட பாடசாலைகளிலும் சிறுவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு சாட்டப்பட்டு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக நொச்சிக்குளம் மகளிர் கிராம அபிவிருத்திச்சங்கத்தினர் குற்றசாட்டினை முன்வைத்துள்ளனர்.

சந்தேக நபரை கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தியுள்ளதாகவும் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டு சட்டநடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் ஓமந்தைப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இவ் விழிப்புணர்வுப் பேரணியில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் இணைப்பு செயலாளர் சு.சுதாகரன்  முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் செ.மயூரன் ஆகியோரும் ஆதரவு வழங்கியிருந்தனர். ‌

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13