கரை­யோ­ரப்­ப­கு­தி­களில் 80 முதல் 100 கிலோ­மீற்றர் வேகத்தில் காற்று வீசும் அபாயம்

Published By: Robert

07 Dec, 2017 | 10:16 AM
image

கரை­யோ­ரப்­ப­கு­தி­களில் 80 முதல் 100 கிலோ­மீற்றர் வேகத்தில் காற்று வீசும் அபாய நிலை­யி­ருப்­ப­தனால் அப்­ப­குதி மக்கள் பிர­தேச செய­ல­கங்கள் ஊடாக அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ள­தாக மட்­டக்­க­ளப்பு மாவட்ட அர­சாங்க அதிபர் எம். உத­ய­குமார் தெரி வித்தார்.

Image result for காற்று வீசும் அபாயம்

மட்­டக்­க­ளப்பு மாவட்ட செய­ல­கத்தில் நேற்று புதன்­கி­ழமை பிற்­பகல் நடை­பெற்ற விசேட ஊட­ க­வி­ய­லாளர் சந்­திப்­பி­லேயே அவர் இதனை தெரி வித்தார்.

அரச அதிபர் மேலும் கூறுகையில்,

திரு­கோ­ணம­லையின் வட­கி­ழக்கு பகு­தியில் 850 கிலோ மீற்றர் தூரத்தில் தாழ­முக்கம் நிலை­கொண்­டுள்­ளதன் கார­ண­மாக கரை­யோ­ரப்­ப­கு­தி­களில் சுமார் 80 தொடக்கம் 100 கிலோ­மீற்றர் வேகத்தில் காற்று வீசும் நிலை­யி­ருப்­ப­தாக வானிலை அவ­தான நிலை­யத்­தினால் தகவல் வழங்­கப்­பட்­டுள்­ளது.

அதற்கு அமைய பிர­தேச செய­ல­கங்கள் ஊடா­கவும் கிரா­மங்­களில் உள்ள அனர்த்­த­கு­ழுக்கள் ஊடா­கவும் அறி­வு­றுத்­தல்கள் வழங்­கப்­பட்­டு­வ­ரு­கின்­றன.

அத்­துடன் அனர்த்­தங்கள் ஏற்­ப­டும்­போது செயற்­படும் வகையில் அனைத்து பிரி­வி­னரும் தயார் நிலையில் இருக்­கின்­றனர்.குறிப்­பாக ஆபத்­துகள் ஏற்­ப­டும்­போது அங்­குள்­ள­வர்­களை மீட்கும் பணி­களை மேற்­கொள்­வ­தற்­காக முப்­ப­டை­யி­னரும் தயார் நிலையில் உள்­ளனர்.

சுனாமி, சூறா­வளி ஏற்­படும் என்ற வதந்­திகள் பரப்பப்­ப­டு­கின்­றது. அவ்­வா­றான எந்த அறி­வித்­தலும் வழங்­கப்­ப­ட­வில்லை. வதந்­தி­களை நம்­ப­ வேண்டாம். அதி­கா­ரிகள் மூலம் சரி­யான தகவல்கள் வழங்­கப்­படும். கடும் காற்று நிலவும் நிலையுள்­ளதால் மீன­வர்கள் கட­லுக்கு செல்­ல­வேண்டாம் என்ற அறி­வு­றுத்­தல் வழங்­கப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் அனர்த்த முகா­மைத்­துவ நிலை­யத்­ திற்கு மேல­தி­க­மாக அனர்த்­த­மு­கா­மைத்துவ நிலைய உதவி பணிப்­பாளர் மற்றும் மாவட்ட செய­லக உத்­தி­யோ­கத்­தர்கள்,இத­னுடன் தொடர்­பு­டைய முக்­கிய நிறு­வ­னங்­கள் இணைந்­த­வ­கையில் ஒரு செய­லணி உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.அதன் ஊடாக மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்­டிய நட­வ­டிக்­கைகள் தொடர்பில் ஆரா­யப்­பட்­டுள்­ளன.

அந்த செய­ல­ணிக்கு அலு­வ­லகம் அமைத்து அதற்கு ஐந்து உத்­தி­யோ­கத்­தர்­களை நிய­மித்து அவர்­களின் தொலை­பேசி எண்களை பொது­மக்­க­ளுக்கு வழங்­கு­வ­தற்­கான ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன.

இந்த செய­ல­ணி­யா­னது தொடர்ச்­சி­யாக மாவட்ட செய­ல­கத்தில் இயங்கும் வகையில் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­படும்.அனர்த்­தங்கள் ஏற்­ப­டும்­போது செயற்­ப­டுத்தும் வகையில் இந்த செய­லணி ஒழுங்­கு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அதே­போன்று பிர­தேச மட்­டத்­திலும் ஒரு அலு­வ­லகம் செயற்­ப­டு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

ஒரு அனர்த்தம் ஏற்­ப­டு­வ­தற்கு முன்­னரும், ஏற்­பட்ட பின்­னரும், அனர்த்தம் ஏற்­ப­டும்­போதும் எவ்­வாறு செயற்­ப­டு­வது என்­பது தொடர்பில் ஆரா­யப்­பட்­டது.அந்­த­வே­ளையில் எவ்­வா­றான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்டும் என்­பது தொடர்­பிலும் ஆரா­யப்­பட்­டது.

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் 09 கரை­யோர பிர­தே­சங்கள் அனர்த்தங்களின்போது பாதிப்பிற் குள்ளாகும் நிலையிலிருக்கின்றன. உயர் ஆபத்தான பகுதி என்றும் ஆபத்தான பகுதி என்றும் இரண் டாக பிரித்து அதற்கான நடவடிக்கைகள் முன்னெ டுக்கப்பட்டுவருகின்றன.

மீனவர்கள் இந்த காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.அவர்கள் தொடர்பான தக வல்களைப்பெறும் நடவடிக்கைகள் முன்னெடுக் கப்பட்டுவருகின்றன என்றும் கூறினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47