வாக்குகளுக்காக கழகங்களை பயன்படுத்துகிறார்கள். அதனால் அவர்கள் சொல்வதை நிர்வாக சபையினர் கேட்டு நடக்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். இதனைத் தடுக்க தற்போதுள்ள 140 கழக வாக்குகளை 75ஆக குறைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளேன்.
அப்படி என்னால் குறைக்க முடியாவிட்டால் நான் தற்போதுள்ள இலங்கைக் கிரிக்கெட் நிருவாகத்தை கலைத்துவிடுவேன் என்று அதிரடியாக அறிவித்துள்ளார் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர.
இலங்கைக் கிரிக்கெட்டை சீரழித்துவிட்ட திலங்க சுமதிபால தலைமையிலான கிரிக்கெட் நிர்வாகத்தை இதற்குமேலும் விட்டுவைக்கப் போகிறீர்களா என்று அமைச்சரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இதுகுறித்து அமைச்சர் மேலும் பேசுகையில்,
கடந்த 8 வருடங்களாக நடைபெற்றுவந்த இடைக்கால நிர்வாக சபையை நீக்கிவிட்டு ஜனநாயக ரீதியாக தேர்தல் மூலம் நியமிக்கப்பட்டவர்கள்தான் தற்போதுள்ள நிர்வாக சபையினர். அதனால் ஜனநாயகத்தின் மீது அதிகாரம் செலுத்த நான் விரும்பவில்லை.
கிரிக்கெட் நிர்வாகத்தை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் மொத்தம் 140 வாக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனை 70ஆக குறைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளேன்.
அப்படி என்னால் முடியாவிட்டால் நான் நிச்சயமாக தற்போதுள்ள கிரிக்கெட் நிர்வாகத்தை கலைத்து இடைக்கால நிர்வாக சபையை அமைப்பேன்.
அணியின் வீழ்ச்சி குறித்து நான் மிகவும் கவனம் செலுத்தி வருகிறேன். சங்கக்காரவும், மஹேலவும் இருந்தகாலத்தில் ஒருவர் இல்லையென்றால் மற்றொருவர் அந்த இடத்தை நிரப்பி வந்தனர். 8 வருடங்களாக அவர்கள் இதனை சரியாக செய்தனர்.
தற்போது அப்படி ஆடக்கூடிய வீரர்கள் அணியில் இல்லை. குறிப்பாக சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ளக்கூடிய வீரர்கள் எமது அணியில் இல்லை.
இந்தியா சென்ற வீரர்களை திருப்பி அழைத்தமை குறித்து?
உண்மைதான். விளையாட்டுத்துறை அமைச்சரின் அனுமதியில்லாமல் எந்த வீரரும் தேசிய மட்டப் போட்டிகளில் கலந்துகொள்ள முடியாது.
குறைந்தது மூன்று வாரங்களுக்கு முன்னர் அணித் தேர்வை நடத்தி எனக்கு வீரர்களின் விபரங்களை தரவேண்டும். ஆனால் இவர்கள் கடைசி நேரத்தில் அனுமதிக்காக அனுப்பியிருந்தனர். அதற்குள் வீரர்களை இந்தியாவுக்கு அனுப்பவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
அதனால்தான் அவர்களை திரும்பி வருமாறு அழைத்தேன். இதன் காரணமாக விமானம் நேரம் தாழ்த்தி பயண மாகியுள்ளது. அந்த நஷ்டத்தை குறித்த அதிகாரி செலுத்த வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM