டில்லியில் இலங்கை வீரர்கள் நடந்து கொண்டவிதம் சரியானதே  :  இந்திய வைத்திய நிபுணர்

Published By: Priyatharshan

06 Dec, 2017 | 10:52 PM
image

புதுடில்லியில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி வீரர்கள் வளி மாசடைதலைக் காரணம் காட்டி போட்டியை இடைநிறுத்தியது சரியானதே என இந்திய வைத்திய நிபுணர் பிரசாந்த் சக்சேனா தெரிவித்துள்ளார்.

இந்தியத் தலைநகர வளிமண்டலம் பெரிதும் மாசுபட்டுள்ளது. குறிப்பாக கடந்த தினங்களாக மிகவும் மோசமான விதத்தில் வளி மாசுபட்டிருந்தது. 

 

இதன் காரணமாக இலங்கை வீரர்கள் மூக்கையும் வாயையும் மறைக்கும் மாஸ்க் அணிந்து விளையாடினார்கள்.  

 

ஒரு கட்டத்தில் போட்டி இடைநிறுத்தப்பட்டது. இது பற்றி கருத்து வெளியிட்ட வைத்திய நிபுணர் பிரசாந்த் சக்சேனா, 

இத்தகைய சூழலில் எவரும் விளையாட முடியாது. வளியில் பெரிதும் மாசுத் துகள்கள் இருந்தன. 

அதனை சுவாசிப்பதால் சிரமத்தையும், இருமலையும் ஏற்படுத்தும்.

இந்நிலையில் இலங்கை அணி வீரர்கள் நடந்துகொண்ட விதம் சரியானதே என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கை வீரர்கள் உடல் உபாதைகளுக்கு உள்ளானதை இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர்  உறுதிசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35