பேருந்துச் சக்கரத்தின் கீழ் தலை வைத்து தற்கொலை

Published By: Devika

06 Dec, 2017 | 04:14 PM
image

அடையாளம் காணப்படாத நபர் ஒருவர் பேருந்தின் பின் சக்கரத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கண்காணிப்பு கெமராவில் பதிவாகியுள்ளது. இணையத்தில் வெளியாகியிருக்கும் இக்காணொளி பரபரப்பாகப் பரிமாறப்பட்டு வருகிறது.

கர்நாடகாவின் ஹசன் நகரில் இச்சம்பவம் நேற்று (5) காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

புகையிரதக் கடவை ஒன்றின் அருகே அந்த மத்திய வயதுடைய மர்ம நபர் தவிப்புடன் காத்திருந்தார். தலையை வைப்பதற்குப் பொருத்தமான இடத்தைத் தேடியதுபோல் இருந்தது அவரது நடவடிக்கைகள்.

ஓரிரண்டு பேருந்துகள் கடந்து சென்றன. மூன்றாவதாக வந்த பேருந்து புகையிரதக் கடவையின் அருகே சற்றே மெதுவாகச் செல்கையில், பேருந்தின் பின் சக்கரத்தின் கீழ் பாய்ந்தார்.

இதன்போது பின் சக்கரம் மிகச் சரியாக அவரது தலையின் மீது ஏறி நசுக்கிச் சென்றது. இதனால், சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.

அவர் யார், எதற்காகத் தற்கொலை செய்துகொண்டார் என்ற விபரங்கள் இதுவரை தெரியவரவில்லை. அவரது உடல் பொது வைத்தியசாலையில் உடற்கூற்றியல் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17