முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மைத்துனரும் ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவருமான உதயங்க வீரதுங்கவால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனு விசாரணை எதிர்வரும் மார்ச் மாதம் 29ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த மனு நேற்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2005 - 2006ம் ஆண்டு காலப்பகுதியில் மிக் ரக விமானக் கொள்வனவின் போது நிதிமோசடி செய்தார் என்று உதயங்கவுக்கு எதிராகக் குற்றஞ்சாட்டப்பட்டு வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில், சர்வதேச பொலிஸார் ஊடாகக் கைதுசெய்யுமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தால் கடந்த வருடம் ஒக்டோபர் 20ஆம் திகதியன்று பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை இரத்துச்செய்யுமாறும் அதற்கு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்குமாறும் கோரியே இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த மனு, உயர்நீதிமன்ற நீதியரசர்களான சிசிர டி அப், நளின் பெரேரா, பிரியந்த ஜயவர்தன ஆகிய மூவர் அடங்கிய குழு முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே மேற்கண்ட திகதி அறிவிக்கப்பட்டது.
இதேவேளை, கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை உதயங்க வீரதுங்க ரஷ்யாவிற்கான இலங்கைத்து தூதுவராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM