நபரொருவர் வீடொன்றில் தங்க ஆபரணங்களை திருடி விட்டு ஒன்றும் அறியாதவர் போல் பிரதேச வாசிகளுடன் இணைந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சமயம் பெஞ்சோ என்றழைக்கப்படும் மோப்ப நாய் குறித்த திருடனை துல்லியமாக இனம்கண்டு பிடித்து கொடுத்துள்ளதையடுத்து ஊர் மக்கள் அந்த நாயினை பாராட்டி கௌரவப்படுத்தியுள்ளனர்
இச்சம்பவம் வலப்பனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மந்தாரங் நுவர பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் இடம் பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
சம்பவ தினத்திற்கு முதல் நாள் குறித்த சந்தேக நபர் மேற்குறிப்பிட்ட பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து அங்கிருந்த அலுமாரியை உடைத்து அதிலிருந்த பல இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை திருடியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து வலப்பனை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் நுவரெலியாவில் அமைந்துள்ள மோப்ப நாய் பிரிவின் உதவியை நாடியுள்ளனர்.
இதன் போது பிரதீப் என்ற பொலிஸ் கான்ஸ்டபிளின் பராமரிப்பிலிருந்து வந்த பெஞ்சோ என்ற மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனை நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் ஒன்று கூடி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்துள்ளனர். இச்சந்தர்ப்பத்தில் குறித்த சந்தேக நபரும் ஒன்றும் அறியாதவன் போல் நின்று வேடிக்கை பார்துள்ளான். இதன் போதே மோப்ப நாய் கூட்
டத்தில் ஏனையவர்களை விலக்கிக்கொண்டு சென்று குறித்த திருடனை துல்லியமாக இனம் கண்டு காட்டிக்கொடுத்துள் ளது. இதன்போது கைது செய்யப்பட்ட நபரை வலப்பனை நீதி மன்றில் ஆஜர் படு த்த நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாக வலப்பனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM