எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தமிழரசு கட்சியுடன் இணைந்து போட்டியிட போவதில்லை என தமிழீழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது.
வவுனியாவில் அமைந்துள்ள ரெலோ அமைப்பின் அலுவலகத்தில் நேற்று இரவு 9 மணிதொடக்கம் அதிகாலை 1.30 வரை அவ் அமைப்பின் அரசியல் குழுக் கூட்டம் இடம்பெற்றது. இந்த கூட்டத்திலேயே குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் ரெலோ அமைப்பின் அரசியல் குழு உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான வினோதராதலிங்கம் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது,
"தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இடப்பங்கீடுகள் உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பில் ரெலோ தனது அதிருப்தி நிலையை வெளிப்படுத்தியது. தமிழரசுக் கட்சியின் செயற்பாடு, அதில் இணைந்து நாம் செயற்பட முடியாத சூழலை உருவாக்கியுள்ளது. அதனால் எதிர்வரும் தேர்தலில் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதில்லை என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இன்று யாழ்ப்பாணத்தில் நாம் தொடர்ந்து இது தொடர்பில் பேசவுள்ளோம். அதன் பின்னரே எவ்வாறு போட்டியிடுவது என்ற முடிவு எட்டப்படும். இன்றைய தினம் தமிழரசுக் கட்சிக்கு எமது முடிவை அறிவிக்கவுள்ளோம்" என அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM