பாடசாலை மட்டத்தில் ஆண்டிறுதிப்பரீட்சை இடம்பெற்று வரும் நிலையில் மாணவர்களை கலாச்சார விழாவிற்கு அழைத்தமை தொடர்பாக பெற்றோர் விசனம் தெரிவித்துள்ளனர்.
வவுனியா மாவட்ட செயலகம் நேற்றைய தினம் வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் கலாச்சார நிகழ்வை நடத்தியிருந்தது. இந் நிகழ்வில் பிரதேச கலைஞர்கள் பலர் பங்கேற்காத நிலையில் பாடசாலை மாணவ மாணவிகளை அழைத்து விழாவை நடத்தியிருந்தனர்.
இது தொடர்பாக பெற்றோர் கருத்து தெரிவிக்கையில்,
"ஆண்டிறுதிப்பரீட்சை இடம்பெற்று வரும் நிலையில் பரீட்சைக்கு தோற்றும் மற்றும் தோற்றவுள்ளவர்கள் உட்பட பல மாணவர்களை அழைத்து வந்து கலாசார நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது. எமது பிள்ளைகள் உயர்தரத்தில் கற்கின்றனர். எமது பிள்ளைகள் பரீட்சையில் தோற்றுவதையும் அதில் பெறும் புள்ளிகள் தொடர்பாகவும் நாம் அதிக கவனம் செலுத்தி வருகின்றோம்.
இந் நிலையில் கலாசார விழாவில் மாணவர்கள் பங்கேற்க வேண்டும் என்பதனை மறுக்கவில்லை. ஆனால் ஆண்டு இறுதிப் பரீட்சை நேரத்தில் இவ்வாறு அழைத்து வந்தமை தொடர்பிலேயே கவலை கொள்கின்றோம். மக்கள் வரமாட்டார்கள் என்பதனால் மாணவர்களை வைத்து விழா செய்வது சரியான நடவடிக்கையா என்பதனை வட மாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சே தீர்மானிக்க வேண்டும்" என தெரிவித்தனர்.
இது தொடர்பாக வவுனியா தெற்கு வலயக்கல்விப்பணிப்பாளரிடம் கேட்டபோது,
"பரீட்சைக்கு தோற்றாத மாணவர்களையே நாம் நிகழ்வுக்கு செல்ல அனுமதித்துள்ளோம். பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் கலந்துகொண்டிருந்தால் நாம் நடவடிக்கை எடுப்போம்" என தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM