மன்னார் பிரதேச பெண் சட்டத்தரணி ஒருவரை பயமுறுத்தியதுடன் பாலியல் சம்பந்தமாக அச்சுறுத்திய மூன்று சந்தேகநபர்கள் கடும் நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் பகுதியைச் சேர்ந்த பெண் சட்டத்தரணி ஒருவரை அச்சுறுத்தி பாலியல் சம்பந்தமாக அச்சத்துக்கு உள்ளாகும் வகையில் வார்த்தைகளை வெளியிட்டது தொடர்பாக மூன்று சந்தேகநபர்களுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து சந்தேகநபர்கள் மூவரையும் பொலிஸார் கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இவர்கள் மூவரும் கடந்த திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த னர்.
கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மன்னார் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த இவ் வழக்கு தொடர்பாக 18.01.2016 ஆம் ஆண்டு சந்தேகநபர்கள் மூவருக்கு எதிராக நீதிமன்றில் பொலிஸார் குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்திருந்தனர்.
அதாவது பெண் சட்டத்தரணி ஒருவரை பயமுறுத்தியதாகவும் அத்துடன் பாலியல் சம்பந்தமான அச்சுறுத்தலை வழங்கியதாகவுமே இச் சந்தேகநபர்களுக்கு எதிராக பொலிஸார் குற்றப்பத்திரத்தை மன்றில் முன்வைத்துள்ளனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை 18.01.2016 ஆம் திகதி இடம்பெற்றபோது சந்தேகநபர்கள் சார்பாக ஆஜரான சட்டத்தரணி அம்மனுவில் சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கும்படி நீதிபதியிடம் கோரிக்கையை முன்வைத்திருந்தார்.
இந்த நிலையில் இவ் வழக்கு கடந்த முதலாம் திகதி திங்கட்கிழமை மீண்டும் மன்னார் நீதிபதி ஆசீர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டிருந்தபோது ஏற்கனவே முன்வைக்கப்பட்ட பிணை முன்வைப்பை நீதிபதி ஏற்றுக்கொண்டு நீதிமன்றம் கடுமையான நிபந்தனைகளுடன் பிணை வழங்கியது.
அதாவது மூன்று சந்தேகநபர்களும் தலா 25000 ரூபா ரொக்கப் பிணையிலும் அத்துடன் ஒவ்வொரு சந்தேக நபர்களும் இரு பிணையாளிகளை முன்வைக்க வேண்டும் என்றும் சந்தேகநபர்கள் முறைப்பாட்டாளரையோ அல்லது சாட்சியாளர்களையோ தொந்தரவு செய்யவோ அல்லது பயமுறுத்தவோ கூடாது எனவும் அத்துடன் கடவுச்சீட்டு இருந்தால் அவைகளை மன்றில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் இவர்கள் நாட்டைவிட்டு வெளியேறக் கூடாது என்பதற்காக குடிவரவு குடியகல்வு திணைக்களத்துக்கு அறிவிக்கப்பட வேண்டும் எனவும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று சந்தேகநபர்கள் மூவரும் கையொப்பம் இடவேண்டும் எனவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்து இவ் மூவரையும் பிணையில் செல்ல அனுமதியளித்து எதிர்வரும் 16.05.2016 ஆம் திகதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத் தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM