சிரியாவில் இடம்பெற்று வரும் உள்நாட்டுப் போரால் இடம்பெயர்ந்த மில்லியன்கணக்கான மக்களுக்கு உதவுவதற்கான நிதியை 9 பில்லியன் டொலராக அதிகரிக்கும் முகமாக உலகத் தலைவர்கள் லண்டனில் வியாழக்கிழமை கூடியுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவர் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 4.6 மில்லியன் அகதிகளில் 2;5 மில்லியன் பேர் துருக்கியிலும் 1.01 மில்லியன் பேர் லெபனானிலும் 600,000 பேருக்கும் அதிகமானோர் ஜோர்தானிலும் தஞ்சமடைந்துள்ளனர்.
ஜோர்தான் மன்னர் அப்துல்லாஹ் தனது நாட்டில் சிரிய அகதிகளின் தொகை கட்டுப்பாட்டை இழந்துள்ளதாக எச்சரித்து மேற்படி அகதிகளின் தொகையைக் கட்டுப்படுத்த மேற்குலக நாடுகள் தனது நாட்டிற்கு உதவ வேண்டும் என கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது
ஜோர்தானில் பதிவு செய்யப்படாத நிலையில் மேலும் ஒரு மில்லியன் சிரிய அகதிகள் உள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவிக்கிறது.
இந்நிலையில் ஜோர்தானில் 100 அகதிக் குடும்பங்கள் வசிப்பதற்காக திறந்து வைக்கப்பட்ட அல்–ஸாதாரி முகாமில் தற்போது 80,000 க்கும் அதிகமான அகதிகள் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரு கிராமம் போன்று விசாலமடைந்துள்ள அந்த முகாமின் தோற்றப்பாட்டை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் சர்வதேச ஊடகங்களில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM