நவநாகரிகத்துக்காக கிழிந்த ஜீன்ஸ் ஆடை அணியும் பெண்களுக்கு தண்டனையாக அவர்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த வேண்டும் என அழைப்புவிடுத்த எகிப்திய சட்டத்தரணியொருவருக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட் டுள்ளது.
அத்துடன் நபிஹ் அல் வாஹ்ஷ் என்ற மேற்படி சட்டத்தரணிக்கு அவரது வன்முறையைத் தூண்டிவிடும் பொறுப்பற்ற விமர்சனத்துக்காக சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக 20,000 எகிப்திய பவுண் (1,130 அமெரிக்க டொலர்) தண்டப் பணமும் விதிக்கப்பட்டுள்ளது.
விபசாரத்திற்கு எதிரான சட்ட வரைபு குறித்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட விவாத நிகழ்ச்சியின் போது நபிஹ் மேற்படி விமர்சனத்தை வெளியிட்டிருந்தார்.
“யுவதி ஒருவர் தனது பின் பாகத்தின் அரைப் பகுதி வெளியே தெரிய வீதியில் நடந்தால் நீங்கள் மகிழ்ச்சியடைவீர்களா?" என அந்நிகழ்ச்சியில் கேள்வி எழுப்பிய நபிஹ், "அவ்வாறு நடந்து செல்லும் யுவதிகள் தொடர்பில் நான் கூறுவது என்னவென்றால், அத்தகைய யுவதிகள் மீது பாலியல் ரீதியான தாக்குதலை நடத்துவது தேசப்பற்றுள்ளவர் ஒருவரது கடமையாகவுள்ள அதேசமயம் அத்தகையவர்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்துவது தேசிய கடமையாகும்" எனத் தெரிவித்திருந்தார்.
"நவநாகரிகம் கருதி கிழிந்த ஆடைகளை அணியும் பெண்கள் தம்மை பாலியல் துஷ்பிரயோகம் செய் வதற்கு ஆண்களு க்கு வரவேற்பளிக்கின்றனர்" என அவர் மேலும் கூறினார். அவரது மேற்படி விமர்சனமானது பொது மக்கள் மத்தியிலும் பெண்கள் உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மத்தியிலும் கடும் சினத்தை ஏற்படுத்தியிருந்தது.
நபிஹின் விமர்சனம் பாலியல் வல்லுறவு மற்றும் வன்முறையை தூண்டுவதாகவுள்ளதுடன் எகிப்திய அரசியலமைப்பிலுள்ள அனைத்து பிரிவுகளையும் மீறும் செயற்பாடாகவும் உள்ளது எனத் தெரிவித்து அந்நாட்டு தேசிய பெண்கள் உரிமைகள் சபை வழக்குத் தாக்கல் செய்திருந்தது.
இந்நிலையில் மேற்படி வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு 3 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
நபிஹ் இதற்கு முன்னர் பிறிதொரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நான் இஸ்ரேலியர் எவரையாவது பார்த்தால் அவரைக் கொல்வேன் எனத் தெரிவித்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத் தக்கது.
அத்துடன் அவர் கடந்த ஒக்டோபர் மாதம் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பெண்கள் முக்காடு அணியத் தேவையில்லை எனக் கருதுவதாக கருத்து வெளியிட்டிருந்த மதகுரு ஒருவருடன் கைகலப்பில் ஈடுபட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM