வரலாற்றில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 68 ஆவது சுதந்திர தினத்தில் தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடுவதற்கான இயலுமை ஏற்படுத்தப்பட்டிருந்தமை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விடயமாகும். ஆனால் தமிழ் மொழியில் தேசிய கீதத்தை பாடுவதால் மாத்திரம் தமிழர்களின் பிரச்சினைகள் தீர்ந்துவிட்டதாக கருத முடியாது. எனினும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான முன்னெடுப்புகளில் இதனை ஒரு ஆரம்பமாக கொள்ளமுடியும். இதனை யாரும் இனவாத கண்கொண்டு பார்க்க வேண்டாம். இதனை அரசியல் பிரச்சினையாக மாற்றுவதற்கு யாரும் முயற்சி செய்ய வேண்டாம் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
68 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் நேற்று வியாழக்கிழமை காலை நுவரெலியாவில், நுவரெலியா மாவட்ட செயலாளர் எலன் மீகஸ்முல்ல தலைமையில் நடைபெற்றது. இதன்போது பாடசாலை மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையும் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன், சிறப்பு அதிதியாக நுவரெலியா மாநகர சபையின் முதல்வர் மகிந்த தொடம்பே கமகே ஆகியோரும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பேசிய இராஜாங்க அமைச்சர்,
சுதந்திர தினம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தினமாக மாறியுள்ளது. அதற்கு பல காரணங்களை குறிப்பிடலாம். குறிப்பாக நாட்டின் ஜனாதிபதியும் பிரதமரும் வெவ்வேறு கட்சிகளின் தலைவர்களாக இருந்த போதும் நல்லாட்சி எனும் குடையின் கீழ் ஒன்றுபட்டு செயற்படுவது வரவேற்கத்தக்கது. இன்று இவர்களின் ஆட்சியின் கீழ் எமது நாட்டை பல உலக நாடுகள் திரும்பிப்பார்க்க ஆரம்பித்துள்ளன. இது நாம் குறுகிய காலத்தில் பெற்றுக்கொண்ட வெற்றியாகும்.
இந்த வெற்றிகள் தொடர வேண்டுமாக இருந்தால் நாம் ஒற்றுமையாக செயற்பட வேண்டும். 1948 ஆம் ஆண்டு நாம் சுதந்திரம் பெற்றுக்கொண்ட பொழுது தேசிய கீதம் இரண்டு மொழிகளிலும் அதாவது தமிழிலும் சிங்கள மொழியில் பாடப்பட்டுள்ளது. ஆனால் அதன் பின்பு இன்று நல்லாட்சியில் அந்த நிலை மீண்டும் உருவாகியுள்ளது. எனவே, இவை பாரிய மாற்றங்களாக இல்லாவிட்டாலும் ஆரம்பம் ஒரு சிறப்பாக இருப்பதாக நான் கருதுகின்றேன். இதனை யாரும் இனவாத கண்கொண்டு பார்க்க வேண்டாம். அரசியல் பிரச்சினையாக மாற்றுவதற்கு முயற்சி செய்ய வேண்டாம்.
தேசிய கீதத்தை தமிழ் மொழியில் இசைப்பதற்கு அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியதன் காரணமாக இன்று கொழும்பில் நடைபெற்ற தேசிய நிகழ்வை ஒரு சில இனவாத அரசியல்வாதிகள் புறக்கணித்திருப்பது மீண்டும் இந்த நாட்டில் ஒற்றுமை இன்மை ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சுதந்திரம் என்பது ஒரு தனிப்பட்ட நபருக்கோ அல்லது ஒரு குறித்த இனத்திற்கோ அல்லது ஒரு மதத்திற்கோ உரித்துடையது அல்ல. மாறாக அது நாட்டின் அனைத்து இன, மத, மொழியினருக்கும் பொதுவானது. சுதந்திரத்திற்காக அனைத்து தலைவர்களும் ஒன்றிணைந்து செயற்பட்டிருப்பதை வரலாறு எமக்கு தெளிவாக விளக்குகின்றது. ஒரு நாட்டின் ஒற்றுமையை கல்வியின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கையாகும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM