இலங்கை கடற்படைக்கு ஜிபார்ட் 5.1 ரக ஆழ்கடல் ரோந்துக் கப்பலை ரஷ்யாவிடம் இருந்து கொள்வனவு செய்வதற்கான 135 மில்லியன் டொலர் உடன்படிக்கை குறித்து ஆராய ரஷ்ய அரசின் பாதுகாப்பு ஏற்றுமதி நிறுவனத்தின் குழுவொன்று இலங்கை வரவுள்ளது.
இந்தக் குழுவினர் ஏனைய ரஷ்ய பாதுகாப்பு கருவிகளை வழங்குவது குறித்தும் பேச்சுக்களை நடத்துவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ரஷ்ய நிறுவனம், போர் டாங்கிகள், சண்டை வாகனங்கள், போர் பயிற்சி விமானங்கள், குண்டுவீச்சு விமானங்கள், விமானங்கள், உலங்கு வானூர்திகள், கப்பல்கள், படகுகள், நீர்மூழ்கிகள், ஆயுதங்கள், வெடிபொருட்கள் என்பனவற்றையும் வழங்க முன்வந்துள்ளது.
இலங்கைக்கு போர்க்கப்பலை விற்கும் உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்காக, ரஷ்ய ஆயுத நிறுவனத்தின் தலைவரான அலெக்சாண்டர் அலெக்சாண்ட்ரோவிச் மிக்கீவ் தலைமையிலான குழு தனிப்பட்ட ஜெட் விமானத்தில் கொழும்பு வரவுள்ளது.
ரஷ்ய அதிபரின் நெருங்கிய நண்பரான அலெக்சான்டர் அலெக்சான்ட்ரோவிச் மிக்கீவுடன் உயர்மட்ட அதிகாரிகளும், தனிப்பட்ட சிறப்பு பாதுகாப்புக் குழுவினரும் கொழும்பு வரவுள்ளனர்.
அலெக்சாண்டர் அலெக்சாண்ட்ரோவிச் மிக்கீவ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி கள் பலரையும் சந்திப்பார் என்று எதிர்பார்க் கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM