ஆஷஸ் தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் ஆடுகளத்தின் போக்குக்கு எதிராக அருமையாக வீசிய நதன் லயன் அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் தன் பந்து வீச்சை முடிந்தால் இங்கிலாந்து வீரர்கள் அடித்து ஆடிப்பார்க்கட்டும் என்று சவால் விடுத்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் சில வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கை இந்தத் தொடருடன் முடிந்து விடும் என்று ஆஷஸ் தொடருக்கு முன்பு கூறி வெறுப்பேற்றிய நதன் லயன் தற்போது, ‘முடிந்தால் அடியுங்கள்’ என்று சவால் விடுத்துள்ளார்.
“இங்கிலாந்து அணியினர் என்னை அடித்து ஆடினால் நிச்சயம் என் வலையில் விழுவர். நிச்சயம் கடந்த டெஸ்ட் போட்டியை விட இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியினர் எனக்கு எதிராக சிறந்த உத்தியுடன் இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
ஆனால் இப்படிப்பட்ட சவால்கள்தான் கிரிக்கெட் ஆட்டத்தின் வேடிக்கையே. வலது கை, இடது கை வீரர்களுக்கும் உலகின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர்களுக்கும் வீசும் சவால்களை நான் எப்போதும் விரும்பியே இருக்கிறேன்.
வீரர்கள் அடித்து ஆடும்போதுதான் எனக்கும் விக்கெட்டுக்களை வீழ்த்துவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே இது எதிர்பார்ப்புகளை அதிகரிக்கிறது, சவாலை எதிர்நோக்குகிறேன் என்றார் நதன் லயன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM