பன்­மைத்­துவ சூழலில் மகிழ்ச்­சியை வெளிப்­ப­டுத்­து­கிறது : மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி

Published By: Priyatharshan

01 Dec, 2017 | 10:39 AM
image

இலங்­கையில் பல்­வேறு சமூக, கலா­சா­ரங்­க­ளைக்­கொண்ட மக்கள் வெவ்­வேறு சம­யங்­களைப் பின்­பற்­று­கின்ற போதிலும் சமா­தா­ன­மா­கவும் ஐக்­கி­ய­மா­கவும் வாழ்ந்து வரு­கின்­றனர். இது சக­வாழ்வு மற்றும் நல்­லி­ணக்­கத்­திற்கு சிறந்த எடுத்­துக்­காட்­டாக விளங்­கு­வ­துடன், பன்­மைத்­துவ சூழலில் மகிழ்ச்­சியை வெளிப்­ப­டுத்­து­வ­தா­கவும் அமைந்­துள்­ளது என்று  ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன  விடுத்­துள்ள மீலாதுன் நபி வாழ்த்துச் செய்­தியில் தெரி­வித்­துள்ளார். 

அதில் அவர் மேலும் தெரி­வித்­துள்­ள ­தா­வது,

பண்­டைய காலம் முதலே எமது இந்த அழ­கிய தேசம் பல்­வேறு சமய, கலா­சார விழாக்­களின் ஊடாக தமது சக­வாழ்வை வெளிக்­காட்டி வந்­துள்­ளது. அரச அனு­ச­ர­ணை­யுடன் நடை­பெறும் இந்த அனைத்து நிகழ்­வு­களும் இலங்கை சமூ­கத்தில் பரஸ்­பர புரிந்­து­ணர்­வையும் நல்­லு­ற­வையும் உறு­திப்­ப­டுத்­து­கின்­றன.

மூன்று தசாப்­த­கால கொடிய யுத்தம் நிறை­வ­டைந்­ததைத் தொடர்ந்து, அனைத்து சமூ­கங்­களும் ஒரு தாய் மக்­களைப் போல ஐக்­கி­யத்­து­டனும் சகோ­த­ரத்­து­வத்துடனும் முன்­மா­தி­ரி­யான ஒரு தேச­மாக சுபிட்­சத்தை நோக்கிச் செல்­வதே எமது எதிர்­பார்ப்­பாக காணப்­ப­டு­கின்­றது. உலகின் அனைத்து சம­யங்­களும் போதிக்கும் அன்பு, கருணை மற்றும் சகிப்­புத்­தன்­மையை வெளிப்­ப­டுத்தும் வகையில் இவ்­வ­ருட தேசிய மீலாத் விழா யாழ்ப்­பா­ணத்தில் நடை­பெ­றுதல் மிகச் சிறப்­பா­ன­தாகும்.

இந்த நிகழ்வை ஏற்­பாடு செய்­துள்ள தபால் சேவைகள், முஸ்லிம் சமய அலு­வல்கள் அமைச்சு மற்றும் முஸ்லிம் சமய, கலா­சார திணைக்­களம் என்பவற்றின் சேவையை பாராட்டுவதுடன், சகல முஸ் லிம் மக்களுக்கும் மீலாதுன் நபி விழா வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17