ஜனா­தி­பதி தலை­மையில் 100 சீன ஜோடி­க­ளுக்கு இலங்­கையில் திரு­மணம்

Published By: Robert

30 Nov, 2017 | 10:22 AM
image

இலங்கை – - சீன உற­வு­முறை மேலும் பல­ம­டையும் வகையில் 100 சீன திரு­மண ஜோடி­க­ளுக்கு இலங்­கையில் திரு­மணம் நடை­பெ­ற­வுள்­ளது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் அவரே  சாட்சிக் கையொப்­ப­மிட்டு   இந்த திரு­ம­ணத்தை நடத்­தி­வைக்­க­வுள்ளார். இலங்கை – சீன உறவில் மேலும் நெருக்­கத்தை ஏற்­ப­டுத்­தவே இந்த நிகழ்வு இடம்­பெ­று­வ­தாக  அர­சாங்­கத்தின் பிர­தி­நி­திகள் அறி­வித்­துள்­ளனர்.   

பாரிய நகர மற்றும் மேல் மாகாண அபி­வி­ருத்தி அமைச்சு மற்றும் இலங்கை சுற்­று­லாத்­தறை அமைச்சு இணைந்து நேற்று பத்­த­ர­முல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்­டலில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் இதனை தெரி­வித்­தனர். 

இது குறித்து பாரிய நகர மற்றும் மேல் மாகாண அபி­வி­ருத்தி அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க செய்­தி­யா­ளர்­க­ளிடம் கூறு­கையில், 

இலங்கை மற்றும் சீன நாடு­களின் உறவு முறை­யா­னது மிக நீண்­ட­கால தொடர்பைக் கொண்­டது.    இரு நாடு­களும் நல்­ல­தொரு நட்­பு­ற­வினை கையாண்டு வரு­கின்­றன. அதேபோல் பெளத்த மத உற­விலும் இரண்டு நாடு­க­ளுக்குமிடையில் நெருங்­கிய தொடர்­புகள் உள்­ளன. இலங்­கையின் மன்­னர்கள் சீன பெண்­களை திரு­மணம் முடித்தும் உள்­ளனர். இந்­நி­லையில் தற்­போது இரு நாடுகள் மத்­தியில் மிகவும் நெருக்­க­மான வர்த்­தக மற்றும் வியா­பார  உற­வு­முறை பல­ம­டைந்­துள்­ளன. 

அத்­துடன் சுற்­று­லாத்­து­றையும் மிகவும் பல­ம­டைந்து காணப்­ப­டு­கின்­றது. இலங்­கையின் சுற்­று­லாத்­து­றையில் சீன சுற்­றுலா வாசி­களின் பங்­க­ளிப்பே அதி­க­மாகும். உலகில் அதிக சுற்­று­லாக்­களை மேற்­கொள்ளும் நபர்­க­ளா­கவும் சுற்­றுலா செல்ல அதி­க­ளவில் செல­வீனம் செய்யும் நபர்­க­ளா­கவும் சீனர்கள் உள்­ளனர். ஆகவே இலங்­கையில் மேலும் சுற்­று­லாத்­து­றையை பலப்­ப­டுத்தும் நோக்­கத்­திலும் இரண்டு நாடு­களின் நட்­பு­றவு மேலும் பல­ம­டையும் வகை­யிலும் அடுத்த மாதம் 17 ஆம் திகதி கொழும்பு விகா­ர­மகா­தேவி பூங்­காவில் 100 சீன திரு­மண ஜோடி­க­ளுக்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் திரு­மணம் இடம்­பெ­ற­வுள்­ளது. 

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே அனை­வ­ருக்­கு­மான சாட்சிக் கையொப்­பத்தை இட­வுள்ளார். இந்­திய திரு­மண தம்­ப­தி­யினர் ஆரம்­பத்தில் இருந்தே இலங்­கையில் தமது திரு­மண நிகழ்­வு­களை முன்­னெ­டுக்கும் சம்­ப­வங்கள் இடம்­பெற்று வரு­கின்­றன. எனினும் சீனர்கள் இலங்­கையில் திரு­மணம் செய்­து­கொள்ளும் முதல் சந்­தர்ப்பம் இது­வாகும். 

ஆகவே 17 ஆம் திகதி காலை விகா­ர­ம­கா­தேவி பூங்­காவில் திரு­மணம் இடம்­பெ­று­வ­துடன் பின்­னி­ரவு பத்­த­ர­முல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்­டலில் இரவு விருந்து நிகழ்வும் அத­னுடன் கூடிய இசை, கலை நிகழ்­வு­களும் இடம்­பெ­ற­வுள்­ளன. 

அத்­துடன் 17 ஆம் திக­தியில் இருந்து 22 ஆம் திகதி வரையில் அவர்கள் இலங்­கையின் புரா­தான, பாரம்­ப­ரிய, சுற்­றுலா பகு­தி­களை சென்று பார்­வை­யி­டவும் தமது திரு­மண நாட்­களை இனி­தாக கொண்­டா­டவும் சகல ஏற்­பா­டு­களும் இலங்கை சுற்­று­லாத்­துறை அமைச்சு செய்­துள்­ளது. 

22 ஆம் திகதி மீண்டும் சீனா நோக்கி செல் லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சீன அர சாங்கத்தின் மூலமாக தெரிவு செய்யப்பட்ட நூறு ஜோடிகளே இவ்வாறு இலங்கையில் திருமணம் செய்துகொள்ளவுள்ளனர். இதில் அவர்களின் அரச குடும்பத்தை சேர்ந்த ஒரு திருமண ஜோடியும் உள்ளது என்பது விசேடமான அம்சமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15