உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை, அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பில் நிர்ணயம் செய்து,கடந்த 2017 பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி வெளியிடப்பட்ட 2006/44 எனும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை விதித்த வழக்கை இன்று 30 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கக் கோரி சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரம் (மொடிஒன்) இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் வழக்குகள் பட்டியலில் குறித்த நகர்த்தல் பத்திரம் தொடர்பில் எவ்வித பதிவும் இல்லாத நிலையில், அது தொடர்பில் வினவிய போது, குறித்த நகர்த்தல் பத்திரம் இன்று விசாரணைக்கு எடுக்கப்படமாட்டது எனவும், ஏற்கனவே வழக்கு விசாரணைக்கு குறிக்கப்பட்ட டிசம்பர் 4 ஆம் திகதி அது விசாரணைக்கு எடுக்கப்படும் எனவும் மேன் முறையீட்டு நீதிமன்றின் பதிவாளர் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றங்கள் 93 இற்கான தேர்தல்களை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், கடந்த 22 ஆம் திகதி மேன் முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய 2006/44 எனும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கான இடைக்கால தடை காரணமாக அத்தேர்தல்களை நடாத்த முடியாது உள்ளதாகவும் சுட்டிக்காட்டி சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய கடந்த திங்களன்று நகர்த்தல் பத்திரம் ஒன்றினை தாக்கல் செய்தார். அத்துடன் அவ்வாறு தேர்தலை நடாத்த முடியாது போவதால் அது பொது மக்களின் வாக்குரிமைக்கு விடுக்கப்படும் பாரிய அச்சுறுத்தல் எனவும் சட்ட மா அதிபர் தனது நகர்த்தல் பத்திரம் ஊடாக சுட்டிக்காட்டியே, இடைக்கால தடை விதிக்கப்பட்ட குறித்த வழக்கை இன்று 30 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்குமாற கோரிக்கை முன்வைத்திருந்தார்.
இந் நிலையிலேயே இந்த நகர்த்தல் பத்திரத்தின் பிரகாரம் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டது எனவும், ஏற்கனவே நீதிபதிகள் நிர்ணயித்த டிசம்பர் 4 ஆம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு வரும் எனவும் மேன் முறையீட்டு நீதிமன்றின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை , அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பில் நிர்ணயம் செய்து, உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவினால் கடந்த 2017 பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2006/44 எனும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை விதித்து மேன் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. குறித்த வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்யுமாறு கோரி வாக்காளர்கள் அறுவரினால் மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல்ச் செய்யப்பட்டடுள்ள ரீட் இலக்கம் 373/2017 எனும் மனுவை கடந்த நவம்பர் 22 ஆம் திகதியன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டே மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான எல்.டி.பீ. தெஹிதெனிய, குமுதினி விக்ரமசிங்க மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய மூவர் கொண்ட நீதிபதிகள் குழாம் இந்த இடைக்கால தடை உத்தர்வைப் பிறப்பித்தது.
அதன்படி இந்த இடைக்கால தடை உத்தரவானது எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதி வரை இருக்கும் என சுட்டிக்காட்டியிருந்த நீதிமன்றம் அதுவரை அந்த வர்த்தமானியை மையபப்டுத்தி எந்த நடவடிக்கைகளும் செய்ய முடியாது எனவும், அன்றைய தினம் இந்த வழக்கின் பிரதிவாதிகளான உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் குறித்த அமைச்சின் செயலாளர் எச்.டி.கமல் பத்மசிறி ஆகியோர் மன்றில் நேரடியாக ஆஜராகவும் அறிவித்தல் விடுத்திருந்தது.
உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை, உறுப்பினர்களின் நிர்ணயம் தொடர்பில் அண்மையில் வெளியிடப்பட்ட, வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக, அறிவிக்கக் கோரி, சட்டத்தரணி மலிக சுசந்தி அல்லபிட்டவின் ஆலோசனைக்கு அமைய சிரேஷ்ட சட்டத்தரணி சஹீட்டினால் கடந்த 15 ஆம் திகதி ரீட் மனுவொன்று வாக்காளர்கள் அறுவர் சார்பில் தாக்கல்ச் செய்யப்பட்டது. வில்லியம் கொபல்லாவ மாவத்த, கண்டியைச் சேர்ந்த வருசமன டேவகே கெதர விஜேரத்ன அல்லது வடுகெதர விஜேரத்ன, கொழும்பு - கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த தொட்டகே சிறிசேன பெர்ணான்டோ, ஹல்மில்லாவெவவைச் சேர்ந்த ராஜபக்ஷ கீர்த்தி மஹிந்த கருணாதிலக குமார, பண்டாரவளையைச் சேர்ந்த டிலந்த கனிஷ்க ஆரியரத்ன, உடவலவையைச் சேர்ந்த ஜனக குமார ராஜபக்ஷ சேனாதீர மற்றும் தெனியாயவைச் சேர்ந்த பிலதுவ ஹேவகே யொஹான் தனுஷ்க ஆகியோர் சார்பிலேயே இந்த மனு தாக்கல்ச் செய்யப்பட்டிருந்தது.
குறித்த மனுவில், கண்டி நகர சபை, கொழும்பு மாநகர சபை, மாத்தறை மாநகர சபை, பண்டுவஸ் நுவ பிரதேச சபை, எம்பிலிபிட்டிய பிரதேச சபை மற்றும் ஹாலி எல பிரதேச சபை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களுக்கு உட்பட்ட வாக்காளர்களே தாங்கள் என சுட்டிக்கடடப்பட்டிருந்தது. இந் நிலையில் உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் கடந்த 2017 பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2006/44 எனும் வர்த்தமானி அறிவித்தல் எல்லை நிர்ணயம் மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ளதுடன் இதன் போது அமைச்சர் தனது அதிகாரத்துக்கு அப்பால் சென்று செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது தொகுதிவாரி உறுப்பினர்களின் எண்னிக்கையை அமைச்சர் விகிதாசார உறுப்பினர்களின் எண்ணிக்கை என மாற்றியுள்ளதாக மனுதாரர்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
விகிதாசார உறுப்பினர்களின் எண்னிக்கையை தொகுதிவாரி உறுப்பினர்களின் எண்ணிக்கையாகவும் தொகுதிவாரி உறுப்பினர்களின் எண்ணிக்கையை விகிதாசார உறுப்பினர்களின் எண்ணிக்கையாகவும் அமைச்சர் பைசர் மாற்றியுள்ளதாகவும் அது சட்டத்துக்கு புறம்பானது எனவும் மனுதாரர்கள் தமது மனுவில் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
. அதனால் குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் எனவும் வழக்கு நிறைவுறும் வரை அந்த வர்த்தமானிக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனவும் மனுதாரர்கள் சார்பில் மேன் முறையீட்டு மன்றில் முன்வைக்கப்ப்ட்டுள்ள ரீட் மனுவூடாக கோராப்பட்ட நிலையிலேயே கடந்த 22 ஆம் திகதி வர்த்தமானிக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM