இராமேஸ்வரம் மீன்பிடித்துறைமுக பகுதிகளில் கடல்சீற்றம் ; மீனவர்கள் மத்தியில் அச்சம்

Published By: Priyatharshan

29 Nov, 2017 | 10:51 AM
image

( ஆர்.பிரபுராவ்)

இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுக பகுதிகளில் கடந்த இரண்டு நாட்காளக வழக்கத்துக்கு மாறாக கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீன்பிடி தொழில்பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்தாழ்வு நிலையால் இராமேஸ்வரம் பாம்பன் மண்டபம் ஆகிய கடலோரப்பகுதிகளில் கடந்த சில நாட்காளக பலத்த மழை பெய்தது மேலும் பாக்ஜலசந்தி கடலில் கடல் வழக்கத்துக்கு மாறாக சீற்றத்துடன் காணப்படுகிறது.

இதனால் தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பல்வேறு கடலோரப்பகுதிகளில் கடந்த இரண்டு நாட்காளாக மீனவர்கள் எவரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. 

இதனால் சுமார் 30 ஆயிரம் நாட்டுப்படகு மீனவர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். 

நேற்று நள்ளிரவு இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகம் கடற்கரைப்பகுதியில் நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பத்திற்க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடல் சீற்றத்தால் ஒன்றுடன் ஒன்று மோதியதில் படகுகள் பலத்த சேதமடைந்து கரையில் ஒதுங்கியது.  

இது தோடர்பில் சேதமடைந்த படகின் உரிமையாளர் எடிசன் தெரிவிக்கையில், 

கடந்த சில நாட்களாக வீசய காற்றால் எமது பகுதியில் எவரும் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

நேற்று நள்ளிரவு திடீரென வீசிய சூறாவளிக்காற்றால் கடலில் நிறுத்தியிருந்த படகு கரை ஒதுங்கி பலத்த சேதமடைந்துள்ளது.

படகிலிருந்த வலைகள் அனைத்தும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. ரூபா இரண்டு இலட்சம் இருந்தால் தான் மீண்டும் மீன் பிடிக்கச் செல்லமுடியும்.

எமது படகுகளை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு  மத்திய மாநில அரசுகள் போர் கால அடிப்படையில் இராமேஸ்வரம் துறைமுகத்தில் தூண்டி வளைவு அமைத்துத் தர வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17