குடும்பப் பெண்ணொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த மேற்கொண்ட முயற்சி தோல்வியடையவே, அப்பெண்ணின் கைக்குழந்தையை நீர் நிரப்பப்பட்டிருந்த பீப்பாயில் அமிழ்த்தி கொலை செய்து விட்டு, இரு சந்தேக நபர்களும் தப்பியோடிய சம்பவம் கதிர்காமப் பகுதியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது.
கதிர்காமப் பகுதியில் மெனிக்புர கம கிராமத்தைச் சேர்ந்த பெண் குழந்தையொன்றே இவ்வாறு நீர் பீப்பாயில் அமிழ்த்தி கொலை செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
தாய் தமது குழந்தையை மடியில் வைத்துக்கொண்டிருந்த வேளையில், வீட்டிற்குள் புகுந்த இருவருள் ஒருவர் தாயிடமிருந்த கைக்குழந்தையை பறித்தெடுத்ததுடன், மற்றைய நபர் தாயை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயற்சித்துள்ளார்.
அவ்வேளையில் அப்பெண் அம் முயற்சிக்கு இடங்கொடாமல், அந் நபருடன் போராடி விடுபட்டு, வெளியில் சென்று கூக்குரலிட்டதையடுத்து, தாயிடமிருந்து கைக்குழந்தையை பறித்தெடுத்த சந்தேக நபர், வீட்டின் பின்னால் நீர் நிரம்பியிருந்த பீப்பாவில் குழந்தையை அமிழ்த்திவிட்டு, இருவருமே தப்பிச் சென்றுள்ளனர்.
அயலவர்கள் அங்கு கூடியதும், குழந்தையை பறிகொடுத்த தாய் அயலவர்களுடன் இணைந்து, குழந்தையை தேடியுள்ளார். இதன்போதே, நீர் நிரம்பிய பீப்பாயிற்குள் குழந்தை அமிழ்த்தப்பட்டு உயிரிழந்து கிடப்பதை கண்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கதிர்காமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உபாலி காரியவசத்திற்கு அறிவித்ததையடுத்து அவர் தலைமையிலான குழுவினர் ஸ்தலத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டனர். சந்தேக நபர்களை தேடி பொலிஸார் வலை விரித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM