இனக் கலவரங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கா விட்டால் சிங்கப்பூர் இந்தளவு வளர்ச்சியை அடைந்திருக்காது. எனவே இலங்கை தலைவர்கள் சிங்கப்பூரின் வரலாற்று பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என முன்னாள் பிரதியமைச்சர் பெ.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சிறுபான்மை இனத்திற்கு எதிரான வன்முறைகள் அடியோடு நிறுத்தப்பட வேண்டும். வெறுமனே விசாரணைகள் என்ற போர்வையில் காலம் கடத்துவதும் ஆறுதல் வார்த்தைகளை கூறுவதால் மாத்திரம் மக்களின் காயங்கள் ஆறிவிடாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
கிந்தோட்டை உட்பட சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக காலாகாலமாக கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகள் குறித்து தெளிவுபடுத்தும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
இனக்கலவரங்கள் மிகவும் வேதனைக்குரியவை. நல்லாட்சியில் இனக் கலவரங்கள் நடக்காது என்ற நம்பிக்கையுடன் இருக்கையில் கிந்தோட்டையில் இடம்பெற்றுள்ள சம்பவமானது மிகவும் வேதனையளிப்பதுடன் சிறுபான்மை மக்களின் எதிர்காலம் குறித்து சந்தேகங்களை ஏற்படுத்தும் வகையிலும் காணப்படுகின் றது.
இலங்கையை பொறுத்தவரையில் இனக் கலவரங்கள் என்பது சர்வசாதாரண விடயமாகி விட்டுள்ளது. 1956 ஆம் ஆண்டு தனிச்சிங்கள சட்டம் கொண்டு வரப்பட்ட போது கலவரம் தொடங்கியது. தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழ் மக்கள் மிகவும் மோசமாக தாக்கப்பட்டனர். ஸ்ரீ ஒழிப்பு போராட்டத்தின் போதும் கூட தமிழர்கள் படுமோசமான முறையில் தாக்கப்பட்டனர்.
இதன்போது தலைநகரிலும் ஏனைய சில புறநகர் பகுதிகளிலும் தமிழ் எழுத்துக்களை தார் பூசி அழித்தனர். 1958 ஆம் ஆண்டு பாரிய இனக் கலவரம் ஏற்பட்டு தென்னிலங்கையில் வாழ்ந்த தமிழ் மக்கள் அச்சத்துடன் கப்பலில் வடக்கிற்கு சென்றனர். இந்த காலப்பகுதிகளில் ஏற்பட்ட தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டுப்படுத்தப்படாத வகையில் கட்டவிழ்க்கப்பட்ட நிலையே காணப்பட்டது.
ஆனால் பிற்காலத்தில் அதாவது 1960 களில் சிறிமாவோ பண்டாரநாயக்க காலத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக இனக் கலவரங்கள் ஆங்காங்கு ஏற்பட்ட போதிலும் பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டன. பாரிய அழிவுகளில் இருந்து தமிழ் மக்கள் பாதுகாக்கப்பட்டனர். மேலும் 1970 களில் தேர்தலுக்கு பின்னரும் கலவரங்கள் ஏற்பட்டன. 1977 ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜயவர்தனவின் ஆட்சிக் காலத்தில் பாரிய கலவரம் தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்க்கப்பட்டது. இரத்தினபுரியில் தமிழ் மக்கள் மீது மிகவும் மோசமான இனவெறி தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.
தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட அனைத்து கலவரங்களையும் மிஞ்சும் அளவிற்கு 1983 ஆம் ஆண்டில் கலவரம் ஏற்பட்டது. கறுப்பு ஜுலை கலவரத்தின் இழப்புகளை தமிழர்கள் இன்றும் அனுபவிக்கின்றனர். இவ்வாறு தமிழர்களுக்கு எதிராக இனவெறி கலவரங்கள் முன்னெடுக்கப்படுகின்றமை இலங்கையில் வழமையான ஒன்றாகி விட்டுள்ளது. அதே போன்று தற்போது முஸ்லிம் மக்களுக்கு எதிராகவும் வன்முறைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக் காலத்தில் தர்கா நகரில் பாரியதொரு கலவரம் ஏற்பட்டது.
ஒரு சிறிய விவகாரம் பாரிய பூதாகர இனமோதலாக வெடித்தமையினால் மஹிந்த ராஜபக் ஷ ஆட்சி அதிகாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டது. சிறுபான்மை மக்களுக்கு எதிராக திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட வன்முறைகளை கண்டும் காணாததை போன்று மஹிந்த ராஜபக் ஷ இருந்தமையின் வெளிப்பாடுகள் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் அறிய கூடியதாக இருந்தது. சிறுபான்மையின மக்கள் மஹிந்த ஆட்சியில் நம்பிக்கை இழந்து போனார்கள். கிந்தோட்டையில் இடம்பெற்ற சம்பவமும் சிறிய விபத்தொன்றைமையப்படுத்தியதாகவே காணப்படுகின்றது.
பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பக்கச்சார்பின்றி செயற்பட்டால் இவ்வாறான இன மோதல்கள் இடம்பெறாதவாறு தடுத்து விடலாம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இரண்டு இனங்களுக்கு இடையில் மோதல்கள் இடம்பெறும் போது பாதுகாப்பு தரப்புகள் பராமுகமாயிருப்பது மோதல்கள் வலுவடைய காரணமாகின்றது. பிரச்சினைக்கு காரணமானவர் எந்தவொரு இனத்தவராக இருந்தாலும் சட்டத்தினை நடைமுறை ப்படுத்தியிருந்தால் கிந்தோடையில் கலவரம் ஏற்பட்டிருக்காது.
வெறுமனே விசாரணைகள் என்ற போர்வையில் காலம் கடத்துவதும் ஆறுதல் வார்த்தைகளை கூறுவதால் மாத்திரம் மக்களின் காயங்கள் ஆறிவிடாது. நல்லாட்சி அரசாங்கத்தின் நீல பசுமை பொருளாதாரத்தை மையப்படுத்திய வரவு–செலவுத் திட்டத்தை சமர்ப் பித்த போது அமைச்சர் மங்கள சமரவீர நாட்டின் சரித்திரத்தையும் நினைவு கூர்ந்தார். பின்னர் சிங்கப்பூருடன் ஒப்பிட்டு கருத்துரைத்தார். 2025 ஆம் ஆண்டு பொருளாதார வெற்றி இலக்குகள் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க பேசும் போதும் சிங்கப்பூரையே உதாரணம் காட்டினார்.
சிங்கப்பூருக்கு தலைமை தாங்கிய லீ குவான் யுவிடமிருந்து எமது நாட்டு தலைவர்கள் பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும். சிங்கப்பூரில் ஆட்சி அதிகாரத்திற்கு சென்றவுடன் லீ குவான் யு கலவரங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இன, மத, மொழி பேதங்களற்ற சிங்கப்பூரை உருவாக்கினார். அந்நாட்டு மக்களுக்கு தேசப்பற்றை ஊக்குவித்தார். இனம், மதம் மற்றும் மொழி ரீதியாக வேறுபட்டா லும் அனைவரும் சிங்கப்பூர்வாசிகள் என்ற உணர்வை ஏற்படுத்தினார்.
ஆனால் சிங்கப்பூரை உதாரணம் காட்டும் இலங்கையில் இன மோதல்கள் மற்றும் இனவாதத்திற்கு முடிவுக்கட்ட முடியாத துரதிர்ஷ்டமான நிலைமை காணப்படுகின்றது. ஆட்சி அதிகாரத்திற்கு வரும் தலைவர்கள் மக்கள் மத்தியில் வேறுபாடுகளை ஏற்படுத்தாத சூழலை உறுதிப்படுத்தி அனைத்து இன மக்களின் சமாதானத்திற்காகவும் செயற்பட வேண்டும். அப்போது தான் வெற்றி இலக்குகளை அடைய முடி யும். இல்லை என்றால் கனவுலகில் வாழ வேண்டிய நிலையே அரசியல் தலைவர்களுக்கும் மக்களுக்கும் ஏற்படும்.
மேலும் இனக் கலவரங்களை அரசியல் சுயநலத்திற்காக பயன்படுத்தும் கொள்கையில் இருந்து எதிர்க் கட்சிகள் விலக வேண்டும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவும் இந்த விடயத்தில் சிந்திக்க வேண்டும். சிறுபான்மையின மக்களுக்கு எதிரான வன்முறைகளை நாட்டில் ஏற்படாமல் தடுக்க வேண்டிய கடமை மஹிந்த ராஜபக் ஷவிற்கு உண்டு. ஒரு சாராரை நேசிப்பவர்களாக இருக்கக் கூடாது. நாட்டையும் அனைத்து இன மக்களையும் நேசிப்பவர்களாக இருக்க வேண்டும்.
சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் யாராக இருந்தாலும் அவர்கள் இலங்கையர்கள் என்ற உணர்வை ஏற்படுத்த வேண்டும். நாட்டின் அபிவிருத்திகளுக்கு இந்த அனைத்து இன மக்களும் பங்களிப்பு செய்துள்ளனர். எதிர்காலத்திலும் இந்த பங்களிப்புகள் இன்றியமையாதவையாகும். நிலையான சமாதானம் மற்றும் பொருளாதார அபி விருத்திகளை நோக்கி செல்லும் இலங்கைக்கு அனை த்து இன மக்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வருவது முக்கியமானதாகும்.
சில பிரச்சினைகளை இரும்புக் கரம் கொண்டு கட்டுப்படுத்த வேண்டும். குறிப்பான இன மோதல்களை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். சட்டங் களை வெறுமனே ஏடுகளில் வைத்திருப்பதில் பலன் இல்லை. இன ஒற்றுமைக்கு எதிராக செயற்படுப வர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM