கிளிநொச்சியில் கனகபுரம் , முழங்காவில் தேராவில் ஆகிய மூன்று துயிலுமில்லங்களிலும், மாவீரர்களின் பெற்றோார்கள் உறவினா்கள், முன்னாள் போராளிகள், பொது மக்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் உணர்வுபூர்வமாக ஒன்று திரண்டு உயரிய இலட்சியத்திற்காக தங்களின் இன்னுயிர்களை தியாகம் செய்தவர்களுக்கு தங்களின் அஞ்சலிகளை செலுத்தியுள்ளனா்.
அந்த வகையில் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் மாலை 6.05 மணிக்கு மணியோசை எழுப்பப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்ட பின்னா் பிராதான பொதுச் சுடரை ஏற்றி வைக்க ஏனைய சுடர்களை மாவீரர்களின் பெற்றோா்கள் மற்றும் கலந்துகொண்டவா்களால் ஏற்றி வைக்கப்பட்டது.
தொடர்ந்து துயிலுமில்ல பாடலான தாயக கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே எனும் பாடல் ஒலிபரப்பாகியது.
இதன் போது மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினா்கள் மற்றும் கலந்துகொண்டுவா்கள் மிகவும் அமைதியாக கண்ணீர் மல்க மாவீரர்களை நினைவு கூர்ந்தமையினை காணக் கூடியதாக இருந்தது.
சுமார் ஐயாயிரம் வரையான பொதுமக்கள் உணர்வெழுச்சியுடன் கலந்துகொண்டனர்.
கடந்த வருடத்தை விட இவ்வருடம் மிகவும் சிறப்பாக மாவீரர் நாள் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM