மட்டக்களப்பு நகரின் தனியார் வங்கி யொன்றில் கொடுக்கல் – வாங்கல் நடவடிக்கை ஒன்றுக்காக சென்றிருந்த ஜனாதி பதியின் இணைப்பு செயலாளரான தாஜுதீன்ரபாய்தீன் என்பவரின் பணப்பையை சூட்சுமமாக திருடிய குற்றச் சாட்டின் கீழ் காங்கேசன்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் சேவையாற்றிய தலைமை பொலிஸ்பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட் டுள்ளார்.
மட்டக்களப்பைச் சேர்ந்த குறித்த உயர்பொலிஸ் அதிகாரி மட்டக்களப்பு பொலிஸாரினால் நேற்று முன் தினம் கைது செய்யப் பட்டதாகவும் அவரை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய நிலை யில் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைத்துள்ளதாகவும் கிழக்குப் பிராந்திய உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து மேலும் அறிய முடிவதாவது,
கடந்த வருடத்தின் டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி மட்டக்களப்பில் உள்ள தனியார்வங்கியில் கொடுக்கல் – வாங்கல் நடவடிக் கைக்காக அம்பாறை, உகன பிரதேசத்தைச் சேர்ந்த தாஜுதீன் எனப்படும் ஜனாதிபதியின் இணைப்புச்செயலாளர் ஒருவர் சென்றுள்ளார். வங்கி நடவடிக்கைகளின் போது அவரது பணப்பை அவரை அறியாமல் கீழே விழுந்துள்ளது. இதன் போது அந்த பணப்பையில் சுமார் ஒரு இலட்சம் ரூப வரை பணம் இருந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந் நிலையில் பணப்பை காணாமல் போயுள்ளது. இது குறித்து குறித்த நபர் சுமார் 3 வாரங்களின் பின்னர்இ கடந்த ஜனவரி 17 ஆம் திகதி மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் தனது பணப்பையை காணவில்லையென முறைப்பாடளித்துள்ளார். முறைப்பாட்டை அடுத்து விசாரணைகளை ஆரம்பித்த மட்டக்களப்பு பொலிஸார் வங்கியின் கண்காணிப்பு கமெரா பதிவுகளை சோதனை செய்தனர். இதன்போது தவறுதலாக விழும் பணப்பையை நபர் ஒருவர் காலால் வங்கிக்கு வெளியே தட்டிவிட்டு பின்னர் எடுத்துச்செல்வது தெரிந்தது. கண்காணிப்பு கமராவில் இருந்த நபர் தொடர்பில் விசாரணை செய்த போது அவர் ஒரு தலைமை பொலிஸ் பரிசோதகர் தர பொலிஸ் அதிகாரி என்பது தெரியவந்தது.
குறித்த அதிகாரி காங்கேசன்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் கடமையாற்றுவதை அறிந்துகொண்ட பொலிஸார் அவரை விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையம் வருமாறு அறிவித்தல் அனுப்பியுள்ளனர். இந்த அறிவித்தலானது ஜனவரி 23 ஆம் திகதி அனுப்பப்பட்டுள்ளது. எனினும் அவர் பொலிஸ் நிலையம் வராததால் பொலிஸார் அவரை நேற்று முன் தினம் கைதுசெய்தனர். இதனையடுத்தே அவர் மட்டக்களப்பு நீதிவான் கணேசராஜா முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டு எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM