சட்ட சிக்கல்கள் அற்ற 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகி எதிர்வரும் 13ஆம் திகதி மதியம் 12 மணி வரை நடைபெறும் என மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம் மொகமட் குறிப்பிட்டுள்ளார்.
வேட்பு மனு கோரலுக்கான அறிவிப்பு இன்றைய தினம் வெளியிடப்படவுள்ள நிலையில், 93 ஆவணங்களுக்கான வேட்பமனு கோரும் பணிகள் டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி முதல் 14ஆம் திகதி நண்பகல் வரை இடம்பெறும் என மேலதிக தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளுராட்சிமன்ற தேர்தலை நடத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்துள்ள தடைக்கமைய 203 உள்ளுராட்சி மன்றங்களின் தேர்தல் தடைபட்டுள்ளது. ஏனைய 133 மன்றங்களின் தேர்தல்களை நடத்துவதற்கு சந்தர்ப்பம் உள்ளபோதும், அவற்றில் 40 நிறுவனங்களில் நிலவும் சட்ட சிக்கல்கள் காரணமாக அவற்றின் தேர்தல்களும் பிற்போடப்பட்டுள்ளது.
இதனால் சட்ட சிக்கல்கள் அற்ற 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கு மாத்திரம் தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல்களுக்கு
சட்ட ரீதியான சிக்கல்கள் அற்ற 93 உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் கோரப்பட உள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM