தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற இளைஞர்கள் மீது போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நடத்திய தாக்குதல் தமிழ்நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் மோட்டார் சைக்கிள் சாரதிகள் தலைக்கவசம் அணியவேண்டும் என்ற விதிமுறை அமலில் உள்ளது. என்றபோதும் பொலிஸார் முதல் சாதாரண மக்கள் வரை இந்த விதிமுறையைப் பெரும்பாலானோர் மதிப்பதில்லை.
பொலிஸாருக்கு எப்போதெல்லாம் தோன்றுகிறதோ, அப்போதெல்லாம் தலைக்கவசம் அணியாத மோட்டார் சைக்கிள் சாரதிகளை நிறுத்தி லஞ்சம் கறப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில், சோதனைச் சாவடியொன்றில் நின்றிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இளைஞர் மீது, மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றுகொண்டிருக்கும்போதே தடியால் கடுமையாகத் தாக்கியுள்ளார். இதனால் அந்த இளைஞர் படுகாயத்துக்கு ஆளானார்.
இதையடுத்து அந்த இளைஞர் பொலிஸில் புகார் பதிவு செய்ததன் பின் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். திடீரென நடத்தப்பட்ட இத்தாக்குதலால் அவ்விளைஞர் சற்றே நிலைகுலைந்திருந்தால், அவரது உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கும் என, சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, தாக்குதல் நடத்திய பொலிஸ் உத்தியோகத்தர் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், அவர் உடனடியாக பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதுடன், அவர் மீது பொலிஸ் விசாரணைக்கும் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM