எதிர்வரும் வாரங்களில் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் சாத்தியம் உள்ளதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் ஏற்பட்டு வரும் தாழமுக்கம் இலங்கையின் கரையோரங்களையும், தென்னிந்தியாவையும் அதிகளவில் பாதிக்கும் சாத்தியம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் தற்போது கடும் வரட்சி நிலவி வருகின்றது. குறிப்பாக தென்னிலங்கையில் பல்வேறு மாவட்டங்களில் கடும் வரட்சி நிலவி வருகின்றது. 50 வீதத்திற்கும் குறைவான வகையிலேயே நீர் சேமிக்கப்பட்டுள்ளது, விவசாயம் மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் மோசமாகப்பாதிக்கப்பட்டுள்ளது என்றும் காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் வரட்சி நிலவுகின்றது. எனினும் இலங்கையின் ஒருசில பகுதிகளில் அதிக மழைவீழ்ச்சி அவ்வப்போது பதிவாகி வருகின்றது. குறிப்பாக மேல், மத்திய மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை நிலவுகின்றது.
இந்நிலையில் எதிர்வரும் வாரங்களில் இலங்கையில் மழை கனமழை மற்றும் கடுங்காற்று வீசும் சாத்தியம் உள்ளதாகவும் காலநிலை அவதான நிலையம் தெரிவிக்கின்றது.
குறிப்பாக மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டு வரும் தாழமுக்கம் காரணமாக இலங்கை மற்றும் தென்னிந்திய பகுதிகள் அதிகளவில் பாதிக்கப்படலாம் எனவும் இலங்கையில் கரையோரப்பகுதிகள் அதிக தாக்கத்திற்கு முகங்கொடுக்க நேரிடலாம் எனவும் எதிர்வு கூறப்படுகின்றது.
இடியுடன் கூடிய கனமழை கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகமும் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. எனவே நிலவும் காலநிலை குறித்து மக்கள் அவதானமாக இருக்குமாறும் வளி
மண்டலவியல் திணைக்கள அறிவுறுத்தல் களை அவதானிக்குமாறும் பொதுமக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM