மக்களுக்கு எச்சரிக்கை ! வங்­காள விரி­கு­டாவின் தாழ­முக்கம் இலங்­கையை பாதிக்கும்

Published By: Priyatharshan

25 Nov, 2017 | 10:13 AM
image

எதிர்­வரும் வாரங்­களில் மழை­யுடன் கூடிய கால­நிலை நிலவும் சாத்­தியம் உள்­ள­தாக  கால­நிலை அவ­தான நிலையம் தெரி­வித்­துள்­ளது. 

மேற்கு வங்­காள விரி­குடா பகு­தியில் ஏற்­பட்­டு­ வரும் தாழ­முக்கம் இலங்­கையின் கரை­யோ­ரங்­க­ளையும், தென்­னிந்­தி­யா­வையும் அதி­க­ளவில் பாதிக்கும் சாத்­தியம்   உள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

இலங்­கையின் பல்­வேறு பகு­தி­களில் தற்­போது கடும் வரட்சி நிலவி வரு­கின்­றது. குறிப்­பாக  தென்­னி­லங்­கையில் பல்­வேறு மாவட்­டங்­களில் கடும் வரட்சி நிலவி வரு­கின்­றது. 50 வீதத்­திற்கும் குறை­வான வகை­யி­லேயே நீர் சேமிக்­கப்­பட்­டுள்­ளது, விவ­சாயம் மற்றும் மக்­களின் அன்­றாட வாழ்க்கை மிகவும் மோச­மாகப்பாதிக்­கப்­பட்­டுள்­ளது என்றும்   கால­நிலை அவ­தான நிலையம் தெரி­வித்­துள்­ளது.  

வடக்கு, வட­மத்­திய மாகா­ணங்­க­ளிலும் வரட்சி நில­வு­கின்­றது. எனினும் இலங்­கையின் ஒரு­சில பகு­தி­களில் அதிக மழை­வீழ்ச்சி அவ்­வப்­போது பதி­வாகி வரு­கின்­றது. குறிப்­பாக மேல், மத்­திய மாகா­ணங்­களில் மழையுடன் கூடிய  கால­நிலை நில­வு­கின்­றது.

இந்­நி­லையில் எதிர்­வரும் வாரங்­களில் இலங்­கையில் மழை கன­மழை மற்றும் கடுங்­காற்று வீசும் சாத்­தியம் உள்­ள­தா­கவும் கால­நிலை அவ­தான நிலையம் தெரி­விக்­கின்­றது. 

குறிப்­பாக மேற்கு வங்­காள விரி­கு­டாவில் ஏற்­பட்­டு­ வரும் தாழ­முக்கம் கார­ண­மாக இலங்கை மற்றும் தென்­னிந்­திய பகு­திகள் அதி­க­ளவில் பாதிக்­கப்­ப­டலாம் எனவும் இலங்­கையில் கரை­யோரப்பகு­திகள் அதிக தாக்­கத்­திற்கு முகங்­கொ­டுக்க நேரி­டலாம் எனவும் எதிர்­வு­ கூ­றப்­ப­டு­கின்­றது. 

இடி­யுடன் கூடிய கன­மழை கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகமும் அதி­க­ரிக்கும் எனவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. எனவே நிலவும் காலநிலை குறித்து மக்கள் அவதானமாக இருக்குமாறும்  வளி

மண்டலவியல் திணைக்கள அறிவுறுத்தல் களை அவதானிக்குமாறும் பொதுமக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53