இந்து சமுத்திரம் தொடர்பாக இலங்கைக்கும் இந்தியாவுக்குமி டையில் முன்னெடுக்கப்படுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள பொருளா தார மற்றும் தொழில்நுட்ப உடன்படிக்கை தொடர்பாக இந்தியத் தரப்புடன் ஆழமான பேச்சுவார்த் தையில் ஈடுபட்டதாகவும் அதற்கான செயற்பாடுகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதமாகும்போது இரண்டு நாடுகளும் இணக்கப்பாட்டிற்கு வந்த வேலைத்திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதாகவும் அவை மீளாய்வு செய்யப்பட்டதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு கடந்த செவ்வாய்க்கிழமை இந்தியாவுக்கு சென்றிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று நாடு திரும்புவதற்கு முன்பாக புதுடில்லியில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே இந்த விடயங்களை குறிப்பிட்டிருக்கிறார்.
பிரதமர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
இந்து சமுத்திரம் தொடர்பாக இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் முன்னெடுக்கப்படவுள்ள உத்தேச புதிய பொருளாதார மற்றும் தொழில்நுட்ப உடன்படிக்கை குறித்து இந்தியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன்.
இரண்டு நாடுகளுக்குமிடையில் பொருளாதார தொடர்புகளை அடிப்படை விடயங்களை முன்நிறுத்தி இந்த பொருளாதார மற்றும் தொழில்நுட்ப உடன்படிக்கையை நிறுவுவதற்கு தீர்மானித்துள்ளோம்.
இந்திய விஜயத்தின்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்திய ஜனாதிபதி வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் இந்திய காங்கிரஸ் கட்சியின் தலை வர் சோனியா காந்தி ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. இந்த பேச்சுவார்த்தைகளின் போது இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் நிலவும் தொடர்புகளை மேலும் பலப்படுத்துவது குறித்து ஆராய்ந்தோம்.
இந்தியாவும் இலங்கையும் இணைந்து முன்னெடுக் கும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்ட இணக்கப்பாடுகளின் அடிப்படையிலான திட்டங் கள் குறித்து இந்தியப் பிரதமருடன் கலந்தாலோசித்தேன்.
அவற்றின் முன்னேற்றம் குறித்து பேசப்பட்டது. சில திட்டங்களை முன்னெடுப்பதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. அவை தொடர்பிலும் பேசப்பட்டது. இங்கு இரண்டு செயற்றிட்டங்களை இந்தியாவும் ஜப்பானும் இணைந்து இலங்கை யில் முன்னெடுக்கவுள்ளன.
இது ஒரு விசேட அம்சமாகும். இன்று இந்தியாவுக்கும் ஜப்பானுக் குமிடையில் காணப்படுகின்ற நட்பு றவானது ஆசிய ஆபிரிக்க அபிவி ருத்தித் தளத்தில் எவ்வாறான பங் களிப்பை வகிக்கும் என்பது குறித் தும் கலந்துரையாடினோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM