நீதிமன்ற தீர்ப்பு இருப்பதன் காரணமாக அரசாங்கத்தினால் தேர்தலை நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக சபை முதல்வரும் அமைச்சருமான லக் ஷ்மன் கிரியெல்ல சபை யில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி, வன ஜீவராசிகள் அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்தின் போது தினேஷ் குணவர்தன தேர்தல் விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவித்ததை அடுத்தே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தினேஷ் குணவர்தன குறிப்பிடுகையில்,
அரசாங்கம் வேண்டும் என்றே தேர்தலை தொடர்ந்து தாமதம் செய்து வருகின்றது. இவ்வாறு ஜனநாயக அடிப்படையில் தேர்தலை தாமதம் செய்வது முரணான செயற்பாடாகும் என குறிப்பிட்டார்.
இதனையடுத்து சபை முதல்வரும் அமைச்சருமான லக் ஷ்மன் கிரியெல்ல கூறும்போது,
நீதிமன்ற தீர்ப்பு இருப்பதன் காரணமாக அரசாங்கத்தினால் தேர்தலை நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என்றார்.
உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக அரசாங்கத்தில் அங்கம் வகிப்போரே வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் அரசாங்கமே வழக்கு தாக்கல் செய்து விட்டு தற்போது நீதிமன்ற தீர்ப்பை எடுத்து காட்ட முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சி பிரதம கொறடாவுமான அநுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.
இதன்போது சபாநாயகர் கரு ஜயசூரிய கூறுகையில்,
தயவு செய்து இந்த விவகாரத்தை இன்றும் (நேற்று) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டாம். இன்று (நேற்று) மாலை கட்சி தலைவர்கள் கூட்டம் நடத்தப்படவுள்ளது.இதன்போது இதைப் பற்றி பேசுவோம் என் றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM