இலங்கையில் தன்னினச் சேர்க்கை, இருபால் உறவு போன்ற பாலியல் செயற்பாடுகளை சட்ட ரீதியாக அங்கீகரிப்பதற்கான முயற்சிகளை அரசு ஆரம்பித்துள்ளது. ஐ.நா.வின் ஆலோசனைப்படியே இந்த முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஐ.நா.வின் மனித உரிமைகள் மீதான சீராய்வுகளின்போது, இலங்கையில் தன்னினச் சேர்க்கை உட்பட முறைசாரா பாலியல் செயற்பாடுகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படாதது குறித்து ஐ.நா. உறுப்பு நாடுகள் கேள்வி எழுப்பின.
இலங்கையின் சட்டங்களின்படி இவ்வாறான செயற்பாடுகளுக்கு பத்து ஆண்டுகால சிறைத் தண்டனையும் வழங்கப்பட முடியும்.
ஐ.நா.வின் உறுப்பு நாடு என்ற வகையில் இலங்கையில் இவ்வாறான பாலியல் செயற்பாடுகள் சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என ஐ.நா.வின் ஏனைய நாடுகள் கருத்து வெளியிட்டுள்ளன.
அதை அமல்படுத்த அரசு சம்மதித்துள்ளதையடுத்து, அதற்கான விதிமுறைகள் குறித்த கலந்தாலோசனைகள் நடைபெறவுள்ளன.
எனினும், இலங்கையில் ஓரினச் சேர்க்கை ஒருபோதும் அனுமதிக்கப்பட மாட்டாது என அண்மையில் சுகாதாரத் துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளதைச் சுட்டிக் காட்டும் ஓரினச் சேர்க்கையாளர்கள், ஐ.நா.வின் பரிந்துரைகளை அரசு முழுமையாக அமல்படுத்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இரண்டு மாதங்களுக்கு முன் ஐ.நா. பரிந்துரைகளை ஏற்று இந்தோனேசியா ஓரினச் சேர்க்கையைச் சட்ட ரீதியாக அங்கீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM