பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து செயற்படும் சட்டவிரோத செயற்பாடுகள் எமது நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே செல்கிறது . அந்த வகையில் பாடசாலை அருகில் போதை பொருட்கள் உள்ளிட்ட மாணவர்களுக்கு பொருத்தமற்ற பொருட்களை விற்பனை செய்பவர்களை கைது செய்வதற்கு பொலிஸார் நாடளாவிய ரீதியில் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
பொலிஸாரின் குறித்த அதிரடி நடவடிக்கையில் முல்லைத்தீவில் பாடசாலை மாணவர்களை இலக்காக வைத்து ஆபாச வீடியோக்களை கைத் தொலைப்பேசிகளில் பதிவேற்றி கொடுத்த கும்பல் சிக்கியுள்ளனர்.
பொலிஸாரிடம் சிக்கியுள்ள குறித்த கும்பல் கைத் தொலைப்பேசிகளை விற்பனை செய்யும் பேரில் ஆபாச வீடியோக்களை மாணவர்களுக்கு பதிவேற்றி கொடுத்து பணம் சம்பாதித்து வந்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 2000த்திற்கும் அதிகமான தமிழ் சிங்கள மக்களின் ஆபாச மற்றும் இரகசிய வீடியோக்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். மேலும் ஆபாச வீடியோக்களை சேமித்து வைத்திருந்த மடி கணினி ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த சட்ட விரோத கும்பல் மாணவர்களின் தொலைப் பேசிகளுக்கு ஆபாச வீடியோக்களை பதிவேற்றி கொடுப்பதற்கு 100 ரூபாவையும் மாணவர்கள் அல்லாத ஏனையோரிடம் பென் ட்ரைவ்களில் வீடியோக்களை பதிவேற்றி கொடுப்பதற்கு 200 ரூபாய் தொடக்கம் 500 ரூபாய் வரை பெற்றுள்ளனர்.
கைது செய்யப்பட்ட கும்பல் மிக நீண்ட காலமாக குறித்த சட்ட விரோத செயற்பாட்டில் மிகவும் சாமர்த்தியமாக எவருக்கும் சந்தேகம் ஏற்படாதவாறு ஆபாச வீடியோக்களை சேமித்து வைத்திருந்த மடி கணினியை பகுதி பகுதியாக கழட்டி வைத்து வாடிக்கையாளர்கள் வீடியோக்களை பதிவேற்றி தருமாறு கேட்கும் பொழுது மாத்திரம் மடி கணினியை மீள் பொருத்தி வீடியோக்களை பதிவேற்றி கொடுத்து வந்துள்ளனர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM