'தமிழ்–சிங்­களம் அரச ஊழி­யர்­க­ளுக்கு கட்­டாய மொழி­யாக்­கப்­பட வேண்டும்"

Published By: Robert

24 Nov, 2017 | 10:44 AM
image

இலங்­கையின் அரச ஊழி­யர்கள் தமி­ழர்­க­ளாக இருக்கும் பட்­சத்தில் அவர்கள் சிங்­கள மொழி­யையும் சிங்­க­ள­வர்­க­ளாக இருக்கும் பட்­சத்தில் அவர்கள் தமிழ் மொழி­யையும் கற்க வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். அரச தொழி­லுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் மாத்­திரம் போதாது. அரச தொழில் ஒன்றில் நிய­மனம் பெற்­றதன் பின் நாட்டில் பின்­பற்­றப்­படும் அனைத்து மொழி­களையும் கற்­றலும் அவ­சி­ய­மாகும்  என அமைச்சர் மனோ கணேசன் தெரி­வித்தார்.

அரச கரும மொழிகள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்,

தேசிய மொழிக்கொள்கை மற்றும் அது தொடர்­பான சட்­டங்கள் இலங்கை அர­சியல் அமைப்பில் 1987 ஆம் ஆண்டு முதல் காணப்­ப­டு­கி­றது. ஆனால் அது நடை­முறைப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தில்லை.  தற்­போது நாட்டில் சிங்­களம் மற்றும் தமிழ்  ஆகிய மொழிகள் தேசிய மொழி­க­ளாகக் கரு­தப்­ப­டு­கின்­றன.  ஆங்­கிலம் பொது மொழி­யாகக் கரு­தப்­ப­டு­கின்­றது. 

இலங்­கையில்  தற்­போது மொழிக் கொள்கைச் சட்டம் வெளியில் இருந்து பார்க்கும்போது மிகவும் அழ­காக தெரிகி­றது. ஆனால் ஆழ­மாக சென்று நோக்கும்போது அவை பூச்­சி­ய­மா­கவே உள்ளன. 

நாட்­டி­லுள்ள அனைத்து குடி­மக்­க­ளுக்கும் எந்­த­வொரு  அரச சேவை நிறு­வ­னத்­துக்கும் சென்று தனது தாய்மொழியில் எழுத்து மூல­மாகவும் வாய்மொழி மூல­மா­கவும் பதிலைப் பெற்றுக் கொள்ளக்கூடிய உரிமை உள்­ளது.  ஆனால் அது நடை­மு­றையில் இல்லை.  அரச ஊழி­யர்கள் எந்த மொழி சார்ந்­த­வர்­களாக இருந்­தாலும் தமிழ், சிங்­களம் ஆகிய இரு மொழி­க­ளையும் கற்க வேண்டும். அதற்­கான சட்­டங்­களும் காணப்­ப­டு­கின்­றன. ஆனால் அவர்கள் அரச சேவைக்கு சென்­றதன் பின்னர் மொழி சார் கற்­கையை மறந்து விடு­கின்றனர்.  இது அர­சாங்­கத்தை உறு­திப்­படுத்­தும் மொழிக் கொள்­கைக்கு பாத­க­மாக அமை­கின்றது. 

எனவே இப்பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணும் முக­மாக அடுத்த வருடம் முதல் அர­சாங்க நிறு­வ­னங்­களில் மொழி அலு­வ­லர்­களை நிய­மிக்கும் திட்டம் எமது அமைச்­சினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.  இதன் மூலம் சிங்கள – தமிழ் மொழி தொடர்பாக அரச நிறுவனங்களில் காணப்படும் பிரச்சினை­களுக்கான இலகுவான செயற்றிட்டங்கள் நடைமுறைப்­படுத்தப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19