மழையுடன் கூடிய காலநிலையானது வடக்கு, கிழக்கு மற்றும் வட-மத்திய மாகாணங்களில் எதிர்வரும் 5 நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
இந்நிலையில் மேற்கு வங்காளத்தில் ஏற்பட்டிருக்கும் புயலின் தாக்கமானது தற்போது இலங்கையை நோக்கி நகர்கின்றமையால் இலங்கையின் தென்மேற்கு கரையோரப் பகுதிகளில் எதிர்வரும் வாரங்களில் கடும் மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கிழக்கு மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக , இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் அதிகூடிய மழை வீழ்ச்சியாக 75 தொடக்கம் 100 மில்லி மீற்றர் வரை எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கு, வட மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் பனி மூட்டத்துடனான காலநிலை காணப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
கடல் பிரதேசங்களில் புத்தளத்திலிருந்து திருகோணமலை வழியாக கொழும்பு , அம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு வரையான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும். புத்தளத்திலிருந்து திருகோணமலை வழியாக காங்கேசன் துறை வரையான கடல் பிரதேசங்களில் காற்றின் வேகமானது மணிக்கு 30 தொடக்கம் 40 கிலோ மீற்றர் வேகத்தில் இருக்கும். எனவே கடற்றொழிலாளர்கள் மிகுந்த கவனத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM