கொடூரமான கொலைகாரர்களை விடுவித்துள்ள அரசாங்கம்

19 Nov, 2015 | 10:58 AM
image

பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை நீக்கி விடு­தலைப் புலி­களின் கொடூ­ர­மான கொலை­கா­ரர்­களை விடு­தலை செய்யும் அர­சாங்கம் மறு­புறம் இச்­சட்­டத்தை பயன்­ப­டுத்தி நாட்டை மீட்­டெ­டுத்த படை­யி­னரை சிறையில் அடைக்­கின்­றது. இது நாட்டின் தேசிய பாது­காப்­பிற்கு பாரிய அச்­சு­றுத்­த­லாகும் என்று முன்னாள் அமைச்சர் பேரா­சி­ரியர் ஜீ.எல்.பீரிஸ் குற்றம் சாட்­டினார்.

 

பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை நீக்கி விடு­தலைப் புலி­களின் கொடூ­ர­மான கொலை­கா­ரர்­களை விடு­தலை செய்யும் அர­சாங்கம் மறு­புறம் இச்­சட்­டத்தை பயன்­ப­டுத்தி நாட்டை மீட்­டெ­டுத்த படை­யி­னரை சிறையில் அடைக்­கின்­றது. இது நாட்டின் தேசிய பாது­காப்­பிற்கு பாரிய அச்­சு­றுத்­த­லாகும் என்று முன்னாள் அமைச்சர் பேரா­சி­ரியர் ஜீ.எல்.பீரிஸ் குற்றம் சாட்­டினார்.    அவுஸ்­தி­ரே­லிய வெளி­நாட்­ட­மைச்­ச­ரிடம் அந்­நாட்டு நீதி­ப­தி­களை இலங்கை தொடர்­பான விசா­ர­ணைக்கு அனுப்­பி­வைக்­கு­மாறு கோரும் அதி­கா­ரத்தை சுமந்­தி­ர­னுக்கு அரசு வழங்­கி­யுள்­ளதா என்றும் அவர் கேள்வி எழுப்­பினார்.  கொழும்பில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற மஹிந்த அணி சார்பு கூட்­டு ­எ­திர்க்­கட்­சி ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் உரை­யாற்­றும்­போதே முன்னாள் வெளி­வி­வ­கார அமைச்சர் பேரா­சி­ரியர் ஜீ.எல்.பீரிஸ் இவ்­வாறு தெரி­வித்தார்.  இங்கு அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,  ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஆட்சிக் காலத்தில் விடு­தலைப் புலி உறுப்­பி­னர்கள் 12000 பேருக்கு புனர்­வாழ்வு வழங்கி விடு­தலை செய்­யப்­பட்­டது. ஆனால் புலி உறுப்­பி­னர்­களில் 275 பேருக்கு புனர்­வாழ்வு வழங்­கவும் முடி­யாது. விடு­தலை செய்­யவும் முடி­யாது. ஏனென்றால் அவர்கள் கொடூ­ர­மான கொலை­க­ளையும் பயங்­க­ர­மான செயல்­க­ளையும் செய்­த­வர்கள்.  எனவே எமது ஆட்­சியில் அவர்­களை நாம் விடு­தலை செய்­ய­வில்லை. ஆனால் தற்­போ­தைய அரசு அமெ­ரிக்­கா­வி­னதும், வெளி­நா­டு­க­ளி­னதும் அழுத்­தங்­க­ளுக்கு அடி பணிந்து பயங்­க­ர­மான பயங்­க­ர­வா­தி­களை விடு­தலை செய்­கின்­றது.  அதற்­காக இலங்­கையின் சட்­டத்­தி­லுள்ள பயங்­க­ர­வாத தடைச்­சட்டம், பாது­காப்பு சட்­டத்­தையும் நீக்கி பயங்­க­ர­வா­தி­களை விடு­தலை செய்­கின்­றது. இது நாட்டின் தேசிய பாது­காப்­பிற்கு பாரிய அச்­சு­றுத்­த­லாகும்.  பயங்­க­ர­வா­தி­களை விடு­தலை செய்யும் அரசு மறு­புறம் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தை பயன்­ப­டுத்தி நாட்டை மீட்­டெ­டுத்த படை­யி­னரை சிறையில் அடைக்­கின்­றது. இதே­வேளை அண்­மையில் இலங்­கைக்கு வந்த அவுஸ்­தி­ரே­லிய வெளி­வி­வ­கார அமைச்­சரை சந்­தித்த தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் சுமந்­திரன் எம்.பி. இலங்கை தொடர்­பான சர்­வ­தேச விசா­ர­ணைக்கு பங்­க­ளிப்­ப­தற்­காக அவுஸ்­தி­ரே­லிய நீதி­ப­தி­களை வழங்­கு­மாறு கோரிக்கை விடுத்­துள்ளார்.  இவ்­வாறு கோரிக்கை விடுக்கும் அதி­கா­ரத்தை சுமந்­தி­ர­னுக்கு வழங்­கி­யது யார்? அரசு இந்த அதி­கா­ரத்தை வழங்­கி­யதா?அதே­வேளை புலி­களின் ஆத­ர­வா­ள­ரான இம்­மா­னுவேல் பாதி­ரி­யாரை இலங்கை வரு­மாறும் அரசு அழைப்பு விடுத்­துள்­ளது. புலம்­பெயர் புலி ஆத­ரவு அமைப்­புக்­களின் பிர­தி­நி­தி­களும் எதிர்­வரும் காலங்­களில் இலங்­கைக்கு வர­வுள்­ளனர். பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து பிரான்ஸ் அந்­நாட்டின் தேசிய பாது­காப்பை பலப்­ப­டுத்­து­கி­றது. ஆனால் எமது நாட்டில் பயங்­க­ர­வாதச் தடைச்­சட்­ட­மூலம் பாது­காப்புச் சட்­டமும் சட்டப் புத்­த­கத்­தி­லி­ருந்து நீக்­கப்­ப­டு­கின்­றன.  ஆனால் நாட்டை மீட்ட எமது படை­யி­ன­ருக்கு எதி­ராக இச் சட்­டத்தை பயன்­ப­டுத்தி சிறைக்குள் அடைக்­கின்­றனர். அத்­தோடு எமது சட்­டங்­களில் திருத்­தங்­களை மேற்­கொண்டு படையினருக்கு எதிராக சர்வதேச விசாரணையை சட்டமாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.  அது மட்டுமல்லாது நிர்வாக ரீதியில் எமது படையினரை தொழிலில் இருந்து வெளியேற்றுவதற்கும் திட்டங்களும் சட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன. அரசாங்கம் இன்று வெளிநாடுகளின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து விட்டது என்றார்.

 

அவுஸ்­தி­ரே­லிய வெளி­நாட்­ட­மைச்­ச­ரிடம் அந்­நாட்டு நீதி­ப­தி­களை இலங்கை தொடர்­பான விசா­ர­ணைக்கு அனுப்­பி­வைக்­கு­மாறு கோரும் அதி­கா­ரத்தை சுமந்­தி­ர­னுக்கு அரசு வழங்­கி­யுள்­ளதா என்றும் அவர் கேள்வி எழுப்­பினார்.

 

கொழும்பில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற மஹிந்த அணி சார்பு கூட்­டு ­எ­திர்க்­கட்­சி ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் உரை­யாற்­றும்­போதே முன்னாள் வெளி­வி­வ­கார அமைச்சர் பேரா­சி­ரியர் ஜீ.எல்.பீரிஸ் இவ்­வாறு தெரி­வித்தார்.

 

இங்கு அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

 

ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஆட்சிக் காலத்தில் விடு­தலைப் புலி உறுப்­பி­னர்கள் 12000 பேருக்கு புனர்­வாழ்வு வழங்கி விடு­தலை செய்­யப்­பட்­டது.

ஆனால் புலி உறுப்­பி­னர்­களில் 275 பேருக்கு புனர்­வாழ்வு வழங்­கவும் முடி­யாது. விடு­தலை செய்­யவும் முடி­யாது. ஏனென்றால் அவர்கள் கொடூ­ர­மான கொலை­க­ளையும் பயங்­க­ர­மான செயல்­க­ளையும் செய்­த­வர்கள்.

 

எனவே எமது ஆட்­சியில் அவர்­களை நாம் விடு­தலை செய்­ய­வில்லை. ஆனால் தற்­போ­தைய அரசு அமெ­ரிக்­கா­வி­னதும், வெளி­நா­டு­க­ளி­னதும் அழுத்­தங்­க­ளுக்கு அடி பணிந்து பயங்­க­ர­மான பயங்­க­ர­வா­தி­களை விடு­தலை செய்­கின்­றது.

 

அதற்­காக இலங்­கையின் சட்­டத்­தி­லுள்ள பயங்­க­ர­வாத தடைச்­சட்டம், பாது­காப்பு சட்­டத்­தையும் நீக்கி பயங்­க­ர­வா­தி­களை விடு­தலை செய்­கின்­றது. இது நாட்டின் தேசிய பாது­காப்­பிற்கு பாரிய அச்­சு­றுத்­த­லாகும்.

 

பயங்­க­ர­வா­தி­களை விடு­தலை செய்யும் அரசு மறு­புறம் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தை பயன்­ப­டுத்தி நாட்டை மீட்­டெ­டுத்த படை­யி­னரை சிறையில் அடைக்­கின்­றது. இதே­வேளை அண்­மையில் இலங்­கைக்கு வந்த அவுஸ்­தி­ரே­லிய வெளி­வி­வ­கார அமைச்­சரை சந்­தித்த தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் சுமந்­திரன் எம்.பி. இலங்கை தொடர்­பான சர்­வ­தேச விசா­ர­ணைக்கு பங்­க­ளிப்­ப­தற்­காக அவுஸ்­தி­ரே­லிய நீதி­ப­தி­களை வழங்­கு­மாறு கோரிக்கை விடுத்­துள்ளார்.

 

இவ்­வாறு கோரிக்கை விடுக்கும் அதி­கா­ரத்தை சுமந்­தி­ர­னுக்கு வழங்­கி­யது யார்? அரசு இந்த அதி­கா­ரத்தை வழங்­கி­யதா?அதே­வேளை புலி­களின் ஆத­ர­வா­ள­ரான இம்­மா­னுவேல் பாதி­ரி­யாரை இலங்கை வரு­மாறும் அரசு அழைப்பு விடுத்­துள்­ளது. புலம்­பெயர் புலி ஆத­ரவு அமைப்­புக்­களின் பிர­தி­நி­தி­களும் எதிர்­வரும் காலங்­களில் இலங்­கைக்கு வர­வுள்­ளனர்.

பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து பிரான்ஸ் அந்­நாட்டின் தேசிய பாது­காப்பை பலப்­ப­டுத்­து­கி­றது. ஆனால் எமது நாட்டில் பயங்­க­ர­வாதச் தடைச்­சட்­ட­மூலம் பாது­காப்புச் சட்­டமும் சட்டப் புத்­த­கத்­தி­லி­ருந்து நீக்­கப்­ப­டு­கின்­றன.

 

ஆனால் நாட்டை மீட்ட எமது படை­யி­ன­ருக்கு எதி­ராக இச் சட்­டத்தை பயன்­ப­டுத்தி சிறைக்குள் அடைக்­கின்­றனர். அத்­தோடு எமது சட்­டங்­களில் திருத்­தங்­களை மேற்­கொண்டு படையினருக்கு எதிராக சர்வதேச விசாரணையை சட்டமாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

 

அது மட்டுமல்லாது நிர்வாக ரீதியில் எமது படையினரை தொழிலில் இருந்து வெளியேற்றுவதற்கும் திட்டங்களும் சட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன. அரசாங்கம் இன்று வெளிநாடுகளின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து விட்டது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33